Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரியல் லைஃப் சூப்பர் ஹீரோவிற்கு காஸ்ட்லியான பரிசு அறிவித்த பிரபல தொழிலதிபர்... என்ன பரிசுனு தெரியுமா?
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவிற்கு தொழிலதிபர் விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தன்னுடைய உயிரை துச்சமென நினைத்து தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்ததற்காக ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பல தரப்பில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். எதிரில் அதி-வேகத்தில் ரயில் வருவதை பார்த்தும் துணிச்சலுடன் ஓடி சென்று குழந்தையை மீட்டதற்காக திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு முக்கிய பிரபலங்கள் வரை பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும், மரியாதையையும் வழங்கி வருகின்றனர்.
இந்திய ரயில்வே துறை அமைச்சகம் ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருக்கின்றது. மயூர் ஷெல்கோவின் வீர தீர செயலுக்கு இந்த மிக சிறிய தொகை போதாது என்றாலும், அவருக்காக இந்த பரிசுத் தொகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்தக்கது.
இந்நிலையில், மயூர் ஷெல்கோவிற்கு புத்தம் புதிய பிராண்ட் நியூ பைக் ஒன்றை பரிசாக வழங்க இருப்பதாக பிரபல தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார். ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா, இவரே ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவிற்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
'ஜாவா ஹீரோஸ்' எனும் புதிய திட்டத்தின் கீழ் இந்த மோட்டார்சைக்கிளை வழங்க இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பார்வை திறன் குறைபாடுள்ள தாயுடன் ரயில்வே நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ரயில் இருப்புப்பாதையில் தவறி விழுந்தார்.
இதைப் பார்த்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே, உடனடியாக தண்டவாளத்தில் குதித்து மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்தார். எதிர்புறத்தில் ரயில் மிக அதிக வேகத்தில் வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரும் அவர் மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார்.
இந்த சம்பவம்குறித்த வீடியோவை ரயில்வே துறை அமைச்சகமே முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. கடந்த 17ம் தேதி அன்று மஹராஷ்டிரா மாநிலத்தின் வாங்கனி ரயில் நிலையத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்தே மத்திய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சகம் மயூர் ஷெல்கேவிற்கு ரூ. 50,000 பரிசு தொகையை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா பைக் பரிசு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
எந்த மாடல் மோட்டார்சைக்கிளை நிறுவனம் பரிசாக வழங்க இருக்கின்றது என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா, 42, ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா பெராக் ஆகிய தேர்வுகளில் பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது.
ஒற்றை ஏபிஎஸ் மற்றும் இரட்டை ஏபிஎஸ் எனும் வேரியண்டுகளில் மேற்கூறிய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், 42 மற்றும் பெராக் ஆகிய இரு மாடல்கள் மட்டும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதியில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அதேவேலையில், ஜாவா மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய இரு மாடல்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ. 1,77,215 தொடங்கி ரூ. 1,97,487 வரையிலான விலையில் ஜாவா பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஆகையால், ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்ததை விட தனியார் நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிளின் பரிசு அறிவிப்பு சற்று அதிக காஸ்ட்லியானதாக அமைய இருக்கின்றது. இதுபோன்ற என்னதான் விலையுயர்ந்த பொருட்கள் மயூர் ஷெல்கேவிற்க்கு அறிவித்தாலும், அவர் மேற்கொண்ட செயல் விலை மதிப்பற்றது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?