இன்னோவா வேண்டாம்.. அம்மாவின் ஆஸ்தான கார்தான் வேண்டும்.. அமைச்சர் அடம் பிடிப்பதன் ரகசியம் இதுதான்..
இன்னோவா கார் வேண்டாம் என்றும், ஜெயலலிதா ஆஸ்தான காராக பயன்படுத்திய பார்ச்சூனர் காரை எனக்கு தர வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்னோவா கார் வேண்டாம் என்றும், ஜெயலலிதா ஆஸ்தான காராக பயன்படுத்திய பார்ச்சூனர் காரை எனக்கு தர வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் பயன்படுத்திய அந்த காரை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என அவர் போராடி வருகிறார். இதற்கான காரணம் என்ன? அந்த காரில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கர்நாடக மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்தது. அக்கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

குமாரசாமி அமைச்சரவையில், உணவு மற்றும் சிவில் சப்ளை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் ஜமீர் அகமது கான். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர். குமாரசாமி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, டொயோட்டா இன்னோவா கார் அதிகாரப்பூர்வ வாகனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் எனக்கு டொயோட்டா பார்ச்சூனர் கார்தான் வேண்டும் என்று அமைச்சர் ஜமீர் அகமது கான் அடம் பிடித்து வருகிறார்.

டொயோட்டா இன்னோவா காரை 'லோ லெவல்' என அமைச்சர் ஜமீர் அகமது கான் நினைக்கிறார். எனவே டொயோட்டா பார்ச்சூனர் காரை பெற முயன்று வருவதாக பத்திரிக்கையாளர்களை கூட்டி அவர் அறிவித்திருப்பது மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ''எனது குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய கார்களில்தான் பயணித்து வருகிறேன். ஆனால் எனக்கு டொயோட்டா இன்னோவா கார் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எனக்கு சௌகரியமாக இருக்காது'' என்றார்.

அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில் மேலும் கூறுகையில், ''நான் எப்போதும் பெரிய வாகனங்களில்தான் (உயரத்தின் அடிப்படையில்) பயணம் செய்வேன். டொயோட்டா இன்னோவா கார் லோ லெவல்'' என்றார்.

டொயோட்டா இன்னோவா அருமையான கார்தான். குறிப்பாக தொலைதூர பயணங்களுக்கு, பார்ச்சூனரை காட்டிலும் இன்னோவா கார்தான் சிறந்தது. இருந்தாலும் பெரிய அளவிலான டொயோட்டா பார்ச்சூனர் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

அதாவது பெரிய அளவில் இருக்கும் எஸ்யூவி கார் கிடைத்தால் எனக்கு ஒகே என அமைச்சர் ஜமீர் அகமது கான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வகையில் பார்த்தால், முன்னாள் முதல்வர் சித்தராமையா பயன்படுத்திய பார்ச்சூனர் எஸ்யூவி கார்கள் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது.

அந்த கார்கள் நல்ல கண்டினில் இருப்பதால்தான், பார்ச்சூனர் காரை அமைச்சர் ஜமீர் அகமது கான் கேட்கிறார். கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் அனைவரும் சிக்கனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சரின் இந்த கோரிக்கை சர்ச்சையாகியுள்ளது.

ஏனெனில் இன்னோவாவை காட்டிலும், பார்ச்சூனர் கார் ஏறக்குறைய இரு மடங்கு அதிக விலையுடையது. பார்ச்சூனர் கார் கேட்பது ஏன்? என்பதற்கு இன்னொரு வித்தியாசமான காரணத்தையும் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.

''முதல் அமைச்சர் குமாரசாமி பாப்புலராக இருக்கிறார். ஆனால் நான் ஒரு சாதாரண காரில் சென்றால் மக்களை என்னை எப்படி அடையாளம் காண்பார்கள்? இதே அமைச்சருக்கான காரில் சென்றால், அமைச்சர் போகிறார் என மக்கள் பேசி கொள்வார்கள்'' எனவும் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.

இத்தனைக்கும் அமைச்சர் ஜமீர் அகமது கான் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல. 100க்கும் மேற்பட்ட லக்ஸரி பஸ்களை இயக்கி வரும் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் பங்குதாரராக அவர் இருப்பதாகவும், எனவே தனது சொந்த காரை பயன்படுத்த வேண்டும் எனவும் எதிர்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.

டொயோட்டா இன்னோவா மற்றும் பார்ச்சூனர் என இரண்டுமே இந்திய மார்க்கெட்டில் பிரபலமான கார்கள்தான். இரண்டு கார்களுமே தங்கள் செக்மெண்டில், மிக அதிகமாகவே விற்பனையாகி வருகின்றன. ஆனால் கேப் நடத்துபவர்கள் பலர், இன்னோவா காரைதான் விரும்புகின்றனர்.

விசாலமான இன்டீரியர், டிரைவிங் கம்போர்ட் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா பார்ச்சூனர் கார் மாடர்ன் லுக்கில் உள்ளது. அதன் ஆப் ரோடு திறன்கள் பார்ச்சூனர் காரை இன்னும் பிரபலமாக்கி விட்டன.

இந்தியாவில் உள்ள பல அமைச்சர்கள் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் என இரண்டும் கார்களையும் தங்கள் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு இன்னோவா காரை பற்றிய அறிமுகமே தேவையில்லை.

மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தாரே நாஞ்சில் சம்பத். அவருக்கு அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா பரிசாக கொடுத்த கார்தான் இன்னோவா. இதன் காரணமாக அவர் இன்னோவா சம்பத் என்று பலராலும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கார்களை பயன்படுத்தியிருந்தாலும், பார்ச்சூனர் காரை பயன்படுத்தும் வழக்கமும் அவருக்கு இருந்தது. கடந்த 2014ம் ஆண்டில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, அவரது ஆஸ்தான பார்ச்சூனர் கார் தமிழகத்தில் இருந்து பெங்களூரு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்ச்சூனர் காரை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் விலை ரூ.14.34 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் பார்ச்சூனர் காரின் விலை ரூ.26.69 லட்சத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








