Just In
- 21 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 35 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 43 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மசூதி ரூபத்தில் மறைந்துள்ள ஆபத்து... கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடக்கலாம்
கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னைகளுக்கு மத்தியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்து, இந்தியாவையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோழிக்கோடு விமான நிலைய துயர சம்பவத்திற்கு, அதன் டேபிள் டாப் வகை ஓடுபாதைதான் (Runway) மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
பொதுவாக சாதாரண ஓடுபாதைகள் சமதளத்தில் அமைக்கப்படும். எனவே விமானத்தை தரையிறக்குவது மிக எளிது. ஆனால் டேபிள் டாப் வகை ஓடுபாதைகள் மலைக்குன்றுகள் அல்லது உயரமான இடங்களில் அமைக்கப்படுகின்றன. எனவே அதன் இருபுறமும் பள்ளங்கள் இருக்கும். இத்தகைய ஓடுபாதைகளில் விமானத்தை தரையிறக்குவது மிகவும் கடினம்.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றால், பள்ளத்தில் விழுந்து விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான், விமானிகள் விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும். அதுவும் மழை, பனி என வானிலை மிகவும் மோசமாக இருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும்.
எனவே டேபிள் டாப் வகை ஓடுபாதைகள் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றன. கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட சோக சம்பத்தை தொடர்ந்து, கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் அடுத்த பேரழிவு நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Image Courtesy: Paul Hamilton/Wiki Commons
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை குறித்த கவலை விமான நிலைய அதிகாரிகளை ஆட்கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் இருந்து 280 மீட்டருக்குள் பக்ரா மசூதி (Bakra mosque) அமைந்திருப்பதுதான் இந்த அச்சத்திற்கு காரணம். இந்த மசூதி, 120 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
Image Courtesy: Rameshng/Wiki Commons
இந்த ஓடுபாதையை வடக்கு நோக்கி நீட்டிக்க முடியவில்லை. எனவே இந்திய விமான நிலைய ஆணையம் (AAI - Airports Authority of India) அதனை தெற்கு நோக்கி நீட்டித்துள்ளது. எனினும் முதன்மை ஓடுபாதையின் நீளத்திற்கு பொருந்தும் வகையில் அதனை நீட்டிக்க முடியவில்லை. கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Rameshng/Wiki Commons
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால், பக்ரா மசூதிக்கு எதிராக கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் தற்போது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டாம் ஓடுபாதையின் முன் பக்ரா மசூதி இருக்கிறது என்பதுதான் அதிகாரிகளின் தற்போதைய பிரச்னையாக உள்ளது.
Image Courtesy: Rameshng/Wiki Commons
ஓடுபாதை முடிவு பாதுகாப்பு பகுதி (Runway End Safety Area - RESA) விதிமுறைப்படி, ஓடுபாதையின் முடிவு பகுதியில் இருந்து, 240 மீட்டர்களை குறைந்தபட்ச பாதுகாப்பு இடைவெளியாக கடைபிடித்தாக வேண்டும். கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள இந்த பிரச்னை இதற்கு முன்பாக பலமுறை எழுப்பப்பட்டு விட்டது. ஆனால் தற்போது வரை அதற்கு எந்தவித தீர்வும் காணப்படவில்லை.
Image Courtesy: Rameshng/Wiki Commons
பக்ரா மசூதி இன்னமும் அங்கேயேதான் இருக்கிறது. இந்த பிரச்னை தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளரிடம், கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் ஏற்கனவே பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக மேற்கு வங்க மாநில அரசுடன், கொல்கத்தா விமான நிலையத்தின் அதிகாரிகள் மீண்டும் பேசவுள்ளனர். இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அரவிந்த் சிங் கூறுகையில், ''பொதுவாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஓடுபாதை முடிவடையும் பகுதியில் கொஞ்சம் இடம் விடப்பட்டுள்ளது.
கோழிக்கோட்டில் இது கடைபிடிக்கப்பட்டிருந்தால், ஒருவேளை விபத்து நடக்காமல் கூட இருந்திருக்கலாம். ஓடுபாதை முடிவடையும் இடத்தில், பாதுகாப்பிற்காக இந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோழிக்கோட்டில் நடந்த துயர சம்பவத்திற்கு பின், நாட்டின் விமான நிலைய ஓடுபாதை பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.
கொல்கத்தா விமான நிலையத்தின் மசூதி விவகாரம் மிகவும் 'சென்சிட்டிவ்' ஆனது. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, கொல்கத்தா விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதை நீட்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில அரசுடன் மீண்டும் நாங்கள் விவாதிப்போம்'' என்றார்.
கொல்கத்தா விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது ஓடுபாதை மிக குறுகியதாக உள்ளது. இந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்குவதில் அசௌகரியம் இருப்பதாகவும், எனவே கடந்த காலங்களில் விமானிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!