Just In
- 56 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தானியங்கி முறையில் கார் டெலிவிரி தரும் எந்திரம்: சிங்கப்பூரில் அறிமுகம்!
தானியங்கி எந்திரம் மூலமாக கார் டெலிவிரி பெறும் வசதி சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
காசு போட்டவுடன் கூல் ட்ரிங்க்ஸ், ரயில் டிக்கெட் போன்றவற்றை வழங்கும் எந்திரங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், பணத்தை கட்டினால், தானியங்கி முறையில் சூப்பர் கார்களை டெலிவிரி வழங்கும் தானியங்கி எந்திரம் சிங்கப்பூரில் நிறுவப்பட்டு இருக்கிறது. இது குறித்து சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
சிங்கப்பூரை சேர்ந்த ஆட்டோபான் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் அனைத்து பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட உயர் வகை கார்களை வாங்கி விற்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதுவரையில் சாதாரண ஷோரூம்கள் வாயிலாக கார் விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் சமீபத்தில் தானியங்கி முறையில் கார்களை டெலிவிரி வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக, 15 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தை அமைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டடத்தில் பல நிறுவனங்களின் சொகுசு கார்கள் ஒய்யாரமாக நிற்கின்றன. மேலும், 60 வகையான கார்களை இந்த கட்டடத்தில் நிறுத்தி வைக்க முடியும்.
இந்த தானியங்கி கார் டெலிவிரி வழங்கும் வசதி கொண்ட இந்த கட்டடத்தில் போர்ஷே, ஃபெராரி, லம்போர்கினி மற்றும் லம்போர்கினி என பல உயர்வகை சொகுசு கார்கள் டெலிவிரி வழங்கப்படுகின்றன.
வழக்கமாக ஷோரூம்களில் நடைபெறும் கார் விற்பனை நடைமுறை போன்று இல்லாமல், முழுவதும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக கார் வாங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. மேலும், மொபைல் போன் அப்ளிகேஷன் அல்லது இந்த கட்டடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் மூலமாக கார் வாங்குவதற்கு தேவையான விபரங்கள் மற்றும் பணத்தை செலுத்தினால் போதும்.
அடுத்த 2 நிமிடங்களில் கார் டெலிவிரி வழங்கப்பட்டு விடும். உலகிலேயே மிகவும் துரிதமான கார் டெலிவிரி வழங்கும் வசதியாக இதனை கூறலாம். வாடிக்கையாளர்களுக்கு இது புதுமையான அனுபவத்தையும் தரும்.
இதுபோன்று தானியங்கி முறையில் கார் டெலிவிரி வழங்கும் நடைமுறை சிங்கப்பூருக்கு வேண்டுமெனில் புதிதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் கார்வானா என்ற நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற தானியங்கி கார் டெலிவிரி வழங்கும் வசதியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்