Just In
- 24 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 58 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்
ஹோண்டா ஆக்டிவா வாடிக்கையாளர் ஒருவர் டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டுள்ளது. கார், பைக் என எவ்விதமான வாகனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோர்ந்து போயுள்ளன.
எனினும் தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சற்றே தெம்பை கொடுத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் மத்தியில் சற்று தாராளமாக பணம் புழங்கும். எனவே புதிய வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வகையில் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது பலர் மும்முரமாக உள்ளனர்.
இவர்களில் ராகேஷ் குமார் குப்தா என்பவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்பினார். இறுதியாக லேட்டஸ்ட் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தேர்வு செய்தார். இந்த ஸ்கூட்டரை இவர் தனித்துவமான முறையில் வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்னாவின் பன்னா நாகா பகுதியில் உள்ள கிருஷ்ணா ஹோண்டா டீலர்ஷிப்பில்தான் ராகேஷ் குமார் குப்தா புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டருக்கான தொகையை முழுக்க முழுக்க அவர் காயின்களாக கொடுத்துள்ளார். இதில், பெரும்பாலானவை 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காயின்கள் ஆகும். இதனால் டீலர்ஷிப் ஊழியர்கள் திகைத்து போய் விட்டனர்.
ராகேஷ் குமார் குப்தா கொடுத்த அனைத்து காயின்களையும் எண்ணி முடிக்க டீலர்ஷிப் ஊழியர்களுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது. ராகேஷ் குமார் குப்தா ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளார். இது டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் வீல்களுடன் விற்பனைக்கு வருகிறது.
இதன் விலை 83 ஆயிரம் ரூபாய் (ஆன் ரோடு, சட்னா, மத்திய பிரதேசம்). இவ்வளவு பெரிய தொகைக்கு காயின்களாக கொடுத்தால், டீலர்ஷிப் ஊழியர்கள் என்ன செய்வார்கள் பாவம்? இருந்தபோதும் வேறு என்ன செய்வது? நிதானமாக காயின்களை எண்ணி முடித்துள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் 3 மணி நேரத்தை எடுத்து கொண்டனர்.
நல்ல வேளையாக ராகேஷ் குமார் குப்தா பெரும்பாலும் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். முழுக்க முழுக்க 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை கொடுத்திருந்தால் டீலர்ஷிப் ஊழியர்களின் நிலைமை என்னவாகியிருக்கும்? ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார்? என்பது தெரியவில்லை.
ஒருவேளை வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தாரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இதுபோன்று காயின்களாக கொடுத்து ஸ்கூட்டரை வாங்கும் முதல் நபர் என ராகேஷ் குமார் குப்தாவை கூற முடியாது. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இப்படி பணம் செலுத்தி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளான்.
அந்த சிறுவன் தனது சகோதரிக்கு ஸ்கூட்டியை பரிசாக வழங்கினான். இதற்கான தொகையை அந்த சிறுவன் காயின்களாகவே செலுத்தினான். தனது சகோதரிக்கு பரிசாக இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவன் தனது பாக்கெட் மணியில் இருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சமயத்தில் இந்த சம்பவம் வெகுவாக கவனம் ஈர்த்தது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!