இந்தியர்களே கவலை வேண்டாம்.. தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. வாயை பிளக்க வைத்த மஹிந்திரா!!

இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் மலிவு விலை உயிர்காக்கும் கருவியை தயார் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் போரில் பல்வேறு முக்கியமான உதவிகளைச் செய்து வருகின்றது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

குறிப்பாக, நிதியுதவி வழங்குதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அது செய்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான கவசங்களையும் அது தயாரித்து வருகின்றது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

அந்தவகையில், முகமூடி, சேனிடைசர் எனப்படும் கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் கண்ணாடி மாஸ்க்குகள் உள்ளிட்ட ஏராளாமான மருத்துவ கருவிகளை அது தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனோ தொற்றுடையவர்களை பாதுகாப்பதில் தலையாய கருவியாக கருதப்படும் வென்டிலேட்டரையும் அது தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

இந்த வென்டிலேட்டரை அது ஏற்கனவே மாதிரி தோற்றத்தில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனை உருவாக்க தொடங்கிய வெறும் 48 மணி நேரத்தில் மஹிந்திரா நிறுவனம் அதனை வடிவமைத்து அசத்தியது. அதுமட்டுமின்றி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் வென்டிலேட்டர்கள் விற்பனைச் செய்யப்பட்டு வரும் வேலையில், மஹிந்திரா நிறுவனம் அதனை வெறும் ரூ. 7,500 என்ற மலிவு விலையில் உருவாக்கி இந்தியாவையே பெருமையடைச் செய்தது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

இந்நிலையில், இந்த மலிவு விலை வென்டிலேட்டருக்கு சில அப்கிரேஷன்களை வழங்கி மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த மலிவு விலை வென்டிலேட்டருக்கு ஏர்100 என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த பெயரை அந்நிறுவனம் வைத்திருக்கின்றது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

இந்த உயிர்காக்கும் எந்திரத்தை உருவாக்க கடந்த 18 நாட்களாக இரவு, பகல் பாராமல் (24*7) அந்நிறுவனம் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கான பணியில் 10 மருத்துர்கள் மற்றும் பயோமெடிக்கல் பொறியியாளர்கள் பங்கேற்றிருந்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

இதுகுறித்து தகவலை டுவிட்டர் பதிவுமூலம் பவன் கோயன்கா தெரிவித்துள்ளார். மேலும், வென்டிலேட்டர் அறிமுகத்தையும், அதன் அப்கிரேஷனைக் குறித்த தகவலையும் டுவிட் பதிவு மூலமே அவர் உறுதி செய்திருக்கின்றார். தொடர்ந்து, தற்போது 20 வென்டிலேட்டர் கருவிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

பொதுவாக வென்டிலேட்டர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், மஹிந்திரா நிறுவனம் இந்த கருவியை வெறும் ரூ. 7,500-க்கே மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த வென்டிலேட்டர்கள் மூலம் ஏழை எளியோர் என அனைவராலும் பயன் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

மஹிந்திரா நிறுவனம் இந்த கருவியை அறிமுகம் செய்தபோது, இந்த கருவி என்னுடையது எனவும், இதனை மஹிந்திரா நிறுவனம் திருடிவிட்டது என்றும் பிஜிஐஎம்இஆர் (PGIMER)-ஐச் சேர்ந்த ராஜிவ் சவுகான் திடுக்கிடும் குற்றம்சாட்டை முன் வைத்திருந்தார். இவர், பிஜிஐஎம்இஆர்-இல் பேராசியர் மற்றும் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். மேலும், வென்டிலேட்டர்கள் குறித்த ஆய்வினையும் செய்து வருகினறார். ஆனால், இவரின் குற்றச்சாட்டிற்கு மஹிந்திரா நிறுவனம் முழுமையாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தியர்களே கவலை வேண்டாம்! தயாரானது மலிவு விலை உயிர் காக்கும் கருவி.. இனி வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்..

கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த உயிர் காக்கும் கருவிகளை உற்பத்தில் செய்வதில் மஹிந்திரா நிறுவனம் அதி தீவிரம் காட்டி வருகின்றது.

தொடர்ந்து, இந்த கருவியின் விலை மிகக் குறைவாக இருப்பதன் காரணத்தால் சிறிய சிறிய மருத்துவமனைகளாலும் இந்த வென்டிலேட்டர்களை வாங்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும் மஹிந்திரா நிறுவனம் நம்பிக்க தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2020, 17:38 [IST]
English summary
Mahindra Low Cost Ventilators Gets Updated Features. Read In Tamil.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+