காவிரிக்காக போராடியவர் ரயிலில் ஏறியபோது ஷாக் அடித்தது எப்படி தெரியுமா?
தமிழகம் முழுவதும் காவிரிக்காக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று பல போராட்டங்களையும் மீறி ஐபிஎல் போட்டிகள் நடந்தது.
தமிழகம் முழுவதும் காவிரிக்காக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று பல போராட்டங்களையும் மீறி ஐபிஎல் போட்டிகள் நடந்தது. இதனால் கொந்தளித்த போராட்டகாரர்கள் இன்று அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழவதும் இன்று பந்த்திற்கு பா.ம.க.,கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில் தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மற்ற மாவட்டங்களில் பந்த் பிசுபிசுத்தது. இந்நிலையில் பா.ம.க வினர் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுதுதான் நிகழ்ந்தது தான் இந்த விபத்து.

ஆர்பாட்டத்தின் போது போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தும், பா.ம.க.வினர் மிக ஆவேசமாக ஆர்பாட்டத்தில் ஈடுட்டனர். இதையடுத்து உணர்ச்சிவேகத்தில் இரண்டு பேர் ரயிலின் இன்ஜின் மீது ஏறி கைகளை தூக்கி கோஷம் போட்டனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ரயிலில் இன்ஜினில் ஏறிய ஒருவரது கை மேல உள்ள கரண்ட் வயரில் பட்டது. அடுத்த நொடியே அவர் மீது கரண்ட் பரவி தீப்பற்றி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிஷ்டவசமாக அவருக்கு உயிர் இருந்தாலும் துரதிருஷ்டவசமாக அவருக்கு 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
ரயில் இன்ஜினில் ஏறியவருக்கு எப்படி ஷாக் அடித்தது, ரயிலில் எவ்வளவு பவர் இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் அதை பற்றி கீழே பார்ப்போம்.

பொதுவாக இந்தியா ரயில்வேயில் உள்ள எலெக்ட்ரிக்கல் லைனில் 25 கி.வாட் அளவு மின்சாரம் இருக்கும். இது ரயில் இன்ஜின் மேலே உள்ள கம்பி வழியாக இன்ஜினிற்குள் சென்று டிசி மின்சாரம்மாக மாறும் அந்த மின்சாரம் ரயலை இயக்க கூடிய மோட்டர் விண்டிலிங்ஸ்சிற்கு செல்லும்

அந்த மின்சாரம் மூலம்மே ரயில்கள் இயங்கி வருகின்றனர். பொதுவாக எலெக்ட்ரிக்கல் லைனில் பாசிட்டிவ் கரண்ட் மட்டுமே இருக்கும். ரயில் இன்ஜின் தான் நெகட்டிவ் மின்சாரத்தை சப்ளை செய்யும். இது ரயில் விபத்திற்குள்ளானால் தீப்பிடிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் செய்துள்ள டிசைன்.

இந்த மின்சாரம் ரயிலின் வீல் வழியாக சென்று தண்டவாளத்திற்கு செல்லும், நீங்கள் ரயிலில் தண்டவாளங்களில் ஆங்காங்கே எர்த்திங் செய்ப்ப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இது அந்த மின்சாரத்தை எர்த்திங்செய்து சர்க்யூட்டை முடிப்பதற்காகதான்.

இந்த நிலையில் ஒரு மனிதன் ரயில் இன்ஜினில் ஏறி அந்த வயரை தொடும் போது மின்சாரத்தை கடத்தும் கண்டக்டராக மாறுகிறான். மனிதன் தோல் என்பது 99 சதவீத மின்சாரத்தை கடத்தகூடியது.

இதனால் மேலும் ரயில் முழுவதும் இரும்பால் செய்யப்பட்டிருப்பதால் ஈசியாக மின்சாரம் பாயும், மிக அதிக அளவு மின்சாரம் பாய்வதால் அதை தாங்காமல் நம் உடலில் தீ ஏற்படும்

தற்போது ஒரு நொடிக்கும் குறைவான நேரமே அவர் அந்த வயரை தொட்டிருந்தாலுமே இந்த மின்சாரம் பாய்ந்துவிடும். இதனால் அவருக்கு உடலில் பெரும் அளவிற்கு சேதம் ஏற்படலாம் மரணம் ஏற்படக்கூட அதிக அளவு வாய்ப்புள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. அதே நேரத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளால் போராட்டகாரர்கள் அடிக்கடி ரயில் மறியல் தான் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மிக ஆபத்தான இடத்தை அந்நியர்கள் எளிதில் அனுகும் படி ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் என்பது இந்தியாவில் முதன்முறை அல்ல பல இடங்களில் நடந்துள்ளது. அதற்கான வீடியோவையும் நாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவுவதை பார்த்திருக்கிறோம்.

ரயில்வே நிர்வாகம் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்நுட்ப ரீதியாக இதை தவிர்க்க வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








