Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆட்டோரிக்ஷா பிடித்து வீடு திரும்பிய அமைச்சர் வீரப்ப மொய்லி
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக புதன்கிழமை தோறும் மெட்ரோ ரயில், பஸ்சை பயன்படுத்தி அலுவலகம் செல்வதாக அறிவித்தார். அதன்படியே, கடந்த மாதம் 9ந் தேதி முதல் வார்த்தையை காப்பாற்றும் வகையில், மெட்ரோ ரயில், பஸ்சில் அலுவலகம் சென்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் தனி தெலங்கானா தொடர்பான மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி பங்கு கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் ஆட்டோரிக்ஷா பிடித்து பாதுகாப்புப் படையினரின் முழு பாதுகாப்பும் இல்லாமல் வீடு திரும்பினார். அமைச்சர் மொய்லியின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
முன்மாதிரி
பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சக அமைச்சர்களும் இதுபோன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். அதற்கு முன்மாதிரியாக மொய்லி பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்.
எதுவரை...?
அமைச்சர் பதவியில் இருக்கும் வரை இதுபோன்று பொது போக்குவரத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், அனைவரும் இந்த முறையை பின்பற்றி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உதவ வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பரபரப்பு
பாதுகாப்புப் படையினரின் துணை இல்லாமல் ஒரு ஆட்டோரிக்ஷாவில் அவர் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பஸ் பயணம்
கடந்த இரு வாரங்களுக்கு முன் பிரதமர் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கிருந்து பஸ்சில் பயணம் செய்து வீடு திரும்பினார். மேலும், பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு 15 நிமிடங்கள் நின்று கொண்டே பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஸ் தினம்
நாடு முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் 6 வாரங்களுக்கு பஸ் தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இது நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும் என அவர் கூறினார்.
பாராட்டு
பொது போக்குவரத்தில் அலுவலகம் சென்று வருவதை பாராட்டி ஏராளமான இ-மெயில்களும், கடிதங்களும் தினம் வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில்
அமைச்சர் மொய்லி மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேவேளை, பொதுமக்களுக்கு அதிக இடையூறு இல்லாத வகையில் இந்த பயணம் அமைந்தால் நல்லது. எல்லா அமைச்சர்களும் இதுபோன்று பாதுகாப்புப் படையினர் புடைசூழ மெட்ரோ ரயிலை பயன்படுத்தத் துவங்கினால், பொதுமக்களுக்கு நிச்சயம் இடையூறாக இருக்கும்.
மெட்ரோ பயணம்
காலையில் மெட்ரோ ரயிலில் அலுவலகம் சென்றுவிட்டு மதிய உணவுக்கு மெட்ரோ ரயிலிலேயே வீடு திரும்புகிறார். பின்னர், மெட்ரோவில் அலுவலகம் சென்று அங்கிருந்து மீ்ண்டும் மெட்ரோ ரயிலிலேயே வீடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மிச்சம்
அமைச்சர் மொய்லி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் பணியாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளுக்கு 600 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துவோம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், பல்வேறு பிரச்னைகளில் காங்கிரசும், அமைச்சர்களும் சிக்கித் தவிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், வீரப்ப மொய்லியின் இந்த செயலை பாராட்ட வேண்டும் என்பதோடு, அவர் பயணம் தொடர வாழ்த்துவோம்.