Just In
- 40 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்திய விமானப்படை பற்றிய 15 சுவாரஸ்ய விஷயங்கள்!!
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. எதிரிகளை விரைவாக எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி, வான் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது.
பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியதாக உள்ளது. அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இந்திய விமானப்படையின் பல சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஸ்தாபிதம்
1932ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி வெறும் 25 வீரர்களுடன் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 8ந் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு, தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டும், நவீனமயமாக்கப்பட்டும் வந்ததன் காரணமாக இன்று உலகின் மிகப்பெரிய விமானப் படைகளுள் ஒன்றாக இருக்கிறது.
4வது பெரிய விமானப்படை
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து உலகிலேயே மிகப்பெரிய விமானப்படை எனும் அந்தஸ்தை இந்திய விமானப்படை பெற்றிருக்கிறது. உலகிலேயே 4வது பெரிய விமானப்படை நம்மிடம்தான் உள்ளது.
பலம்
இந்திய விமானப்படையில் 1.70 லட்சம் வீரர்கள் உள்ளனர். 1,130 போர் விமானங்களும், வானிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் 7 டேங்கர் விமானங்களும், 133 சரக்கு விமானங்களும், 158 பயிற்சி விமானங்களும், 33 தாக்குதல் அம்சங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள், 156 சரக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
மியூசியம்
டெல்லியில் இந்திய விமானப்படையின் மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் விமானப்படையின் வரலாற்றையும், சாதனைகளும் பிரதிபலிக்கும் காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
வெற்றி, வெற்றி, வெற்றி
இந்திய விமானப்படையின் வரலாற்றில் 1948 முதல் கார்கில் போர் வரையிலான சரித்திரத்தில் அனைத்து போர்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய விமானப்படை.
முதல் போர்
இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை. இரண்டாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்கேற்றது.
ராயல் பெயர்
இங்கிலாந்து விமானப்படையின் இந்திய பிரிவாக இயங்கிய நம் நாட்டு விமானப்படை இரண்டாம் உலகப் போருக்காக 1945 முதல் 1950 வரை ராயல் இந்திய விமானப்படை என்று அழைக்கப்பட்டது. 1950ல் குடியரசு நாடாக மாறியபோது ராயல் நீக்கப்பட்டது.
எமகாதக மிக்21 விமானம்
இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள மிக் 21 ரக விமானங்களின் விபத்துக்களால் இதுவரை 171 பைலட்டுகள், 39 பொதுமக்கள் மற்றும் 8 இதரத் துறைகளை சேர்ந்தவர்களின் உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.
விமானப்படை தளங்கள்
நாடு முழுவதும் 60 விமானப் படை தளங்கள் இருக்கின்றன. இதில், 16 விமானப்படை தளங்களை கொண்டிருக்கும் மேற்கு பிராந்தியமே மிகப்பெரியது. நம் நாடு தவிர்த்து, வெளிநாட்டிலும் இந்திய விமானப்படைக்கு ஒரு தளம் உண்டு. அது தஜிகிஸ்தான் நாட்டில் பார்கோர் என்ற இடத்தில் உள்ளது.
மிக உயரமான விமானப்படை தளம்
இந்திய விமானப்படையின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தளம், சியாச்சின் பனிச்சிகரத்தில் உள்ளது.
உலக சாதனை
லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை லடாக்கிலுள்ள டவுலத் பெக் ஒல்டி விமான ஓடுபாதையில் தரையிறக்கி இந்திய விமானப்படை சாதனை படைத்தது. உலகிலேயே அதிக உயரத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டது உலக சாதனையாக கருதப்படுகிறது. அந்த விமானம் கடல் மட்டத்திலிருந்து 16,654 அடி உயரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.
முதல் விமானம்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் போர் விமானம் எச்எஃப்24 மருத். ஜெர்மனியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர் கர்ட் டேங்க் இந்த விமானத்தை வடிவமைத்து கொடுத்தார். 1961 முதல் 1985 வரை பயன்பாட்டில் இருந்தது. இதற்கடுத்து, இப்போது தேஜஸ் என்ற இலகு வகை போர் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மூன்று பெரிய விமானங்கள்
உலகிலேயே சி-17 குளோப்மாஸ்டர் 3, லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் Il-76 ஆகிய மூன்று பெரிய வகை விமானங்களை பயன்படுத்தும் ஒரே விமானப்படை இந்திய விமானப்படைதான் எனஅபது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை
உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட விமானப்படை என்ற பெருமை இந்திய விமானப்படைக்கு உண்டு. 2013ம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, ஆபரேசன் ரஹத் என்ற பெயரில் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 19,600 பேர் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் 2,140 முறை பறந்து இந்த மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தது. மேலும், 3,82,400 கிலோ எடையுடைய மீட்பு மற்றும் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கியது.
லோகோ மாற்றம்
1933ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவ சின்னம் 4 முறை மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது தேசியக் கொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!