Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!
வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகளை இந்த செய்தியில் காணலாம்.
ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை மூலமாக உலகத்தையை கிடுகிடுக்க வைத்துள்ள வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் அதிரடி குறித்து சொல்லத் தேவையில்லை. தனது அதிரடி நடவடிக்கைகளால் வெளிநாடுகளை மட்டுமல்ல, உள்நாட்டு மக்களையும் மிரட்டி உருட்டி ஆட்சி செய்து வருகிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
உலகிலேயே மிக கொடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் வடகொரியாவில் சாலை விதிகளிலும் பல விசித்திரங்களை காண முடிகிறது. அந்த வகையில், வடகொரியாவில் பின்பற்றப்படும் வித்தியாசமான சாலை விதிகளை இந்த செய்தியில் காணலாம்.
Picture credit: newfocusintl
நம்மூர் போன்று எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்க முடியாது. அரசியல் பொறுப்பில் இருப்பவர்களும், அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு வாகனங்களை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே சொந்த கார் என்பதை நினைத்து பார்க்க முடியும்.
அதேபோன்று, சாலைகளை பயன்படுத்துவதிலும் பாரபட்சமான விதிகள் உண்டு. நெடுஞ்சாலை மற்றும் நகரச் சாலைகளில் சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என பிரத்யேக தடம் உண்டு. அதில், அவர்கள் நினைத்த வேகத்தில் செல்ல முடியும்.
அடுத்து சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கும், பொது போக்குவரத்துக்கு தனித்தனி தடங்கள் உண்டு. சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கான தடத்தில் அதிக வேகத்தில் செல்வதற்கான வேக வரம்பும், பின்தங்கியவர்களுக்கான தடத்தில் குறைவான வேகத்தில் செல்லும் வகையில் வேக வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், சமூகத்தில் பின்தங்கியவர்கள் தடம் மாறி செல்வதற்கு அனுமதி கிடையாது. காலியாக இருக்கிறதே என்று மாறிச் சென்றால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். சொந்த வாகனங்களை எல்லோரும் வாங்க முடியாது என்பதால், வாகன போக்குவரத்து மிக குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தடத்திற்கும் ஒவ்வொரு ஸ்பீடு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வேக வரம்பை மீறுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் உண்டு. எனவே, அந்நாட்டு ஓட்டுனர்கள் மறந்தும் கூட வேக வரம்பை மீறி செல்ல முடியாது. அந்நாட்டில் குற்றம் புரிபவர்களுக்கு மூன்று தலைமுறை தண்டனை வழங்கப்படுகிறது.
அதாவது, குற்றம் செய்தவர் ஆயுள் தண்டனை அனுபவித்து இறந்து போனால், அவருடைய அடுத்த இரண்டு தலைமுறையும் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு கடுமையான தண்டனை இருக்கும்போது நிச்சயம் குற்றம் புரிய மனது வராது.
சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய சாலை விதிமுறையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதாவது, தலைநகர் பியாங்யாங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் தனது தந்தை கிம் ஜாங் 2 மற்றும் அவரது தாத்தா கிம் 2 ஆகியோரின் பிரம்மாண்ட சிலை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் மூன்று மைல் வேகத்தில் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
நாட்டை ஆட்சி செய்து வரும் தனது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அந்த சிலைகள் அமைந்துள்ள பகுதியில் ஓட்டுனர்கள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காகவே, அங்கு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மீறி சென்றால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியாது.
நாட்டை ஆட்சி செய்து வரும் தனது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அந்த சிலைகள் அமைந்துள்ள பகுதியில் ஓட்டுனர்கள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காகவே, அங்கு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மீறி சென்றால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியாது.
இருப்பினும், அந்நாட்டில் இரண்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் உண்டு. வடகொரிய ஆட்டோமொபைல் அமைப்புடன் இணைந்து பியாங்வா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது ஒரு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் எஸ்யூவியின் டிசைனை ஒத்திருக்கிறது. சீனாவின் கூட்டாளி என்பதால், காப்பியடிப்பதற்கு வடகொரியாவுக்கும் எந்த தயக்கமும் இல்லைபோலும்.
அடுத்து ஒரு கார் மாடல் இருக்கிறது. அந்த செடான் கார் மாடல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை காப்பியடித்து தயாரிக்கப்பட்டது போன்று இருக்கிறது. இந்த கார்கள்தான் தற்போது அந்நாட்டில் விற்பனையாகும் முன்னணி மாடல்கள்.
இத்தனைக்கும் இந்த கார்கள் வடகொரியாவின் ஜென்ம எதிரியான தென்கொரியாவை சேர்ந்த பியாங்வா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடகொரிய ஆட்டோமொபைல் துறை கூட்டமைப்பு உருவாக்கி வருகிறது.
ஆண்டுக்கு 10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கார் ஆலைகளை பெற்றிருந்தும், ஆண்டுக்கு 300 முதல் 400 கார்கள் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கார் வாங்குவதற்கான விதிமுறைகள் மிக கடுமையானது என்பதே இதற்கு காரணம்.
சாலைவிதிகளில் மட்டும் விசித்திரம் இல்லை. தலைநகரில் குடியேற அரசு அனுமதி பெற வேண்டும், அரசு தொலைக்காட்சியை மட்டுமே பார்க்க வேண்டும், பைபிள் வைத்திருப்பது சட்ட விரோதம், அரசின் ஹேர் ஸ்டைல் விதிமுறைகளின்படியே முடி வெட்டி வேண்டும், ஆபாச படம் பார்த்தால் மரண தண்டனை என இந்த பட்டியல் நீள்கிறது.
மொத்தத்தில் வடகொரியாவில் பிறக்காமல் இருப்பதே பெரும் புண்ணியம் என்று நினைக்கும் அளவுக்கு அங்கு சாலை விதிகளும் இதர விதிகளும் உள்ளன.
Photo Credit:newfocusintl and Wiki Commons
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...