Just In
- 36 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!
பொது இடத்தில் காரில் சாகச விளையாட்டை காண்பித்தவர்களுக்கு துபாய் மன்னர் நூதன தண்டனையை வழங்கி உள்ளார்.
துபாய் நகரில் உள்ள பொது சாலைகளில் கார் ஸ்டன்ட் எனப்படும் சாகச விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபடுவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. அங்கு கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்களை தடுக்க முடியாத நிலை இருக்கிறது.
அதேபோன்று ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது. போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள பகுதியில், இளைஞர்கள் சிலர் காரில் சாகச விளையாட்டில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மழை பெய்த அந்த தருணத்தில் 'டவ்நட்' எனப்படும் காரை சுழல வைத்து செய்யும் சறுக்கிச் செல்லும் சாகச விளையாட்டில் அந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.
குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் நடமாடிக்கொண்டிருந்த பொது இடத்தில், மிக ஆபத்தான வகையில் காரில் சாகசம் செய்து பார்ப்போரை மிரள வைத்தார் காரை ஓட்டிய இளைஞர். இந்த நிலையில், அந்த கார் சாகச விளையாட்டை அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலாக பரவியது.
இதையடுத்து, பொது இடத்தில் ஆபத்தான வகையில் காரில் ஸ்டன்ட் செய்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவருடன் அந்த காரில் இருந்த மேலும் மூன்று இளைஞர்களும் போலீசாரிடம் சிக்கினர்.
அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிய இளைஞர் 17 வயது நிரம்பியவர். அந்த இளைஞரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காரை எடுத்து வந்து பொது சாலையில் வித்தை காட்டியுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து துபாய் மன்னர் ஷேக் முகம்மது பின் ரஷீது அல் மக்டூம் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டது. சாகசத்தில் ஈடுபட்டவர்கள் சிறார் குற்றப்பிரிவில் வருவதால், அவர்களுக்கு நூதன தண்டனையை மன்னர் வழங்கியுள்ளார்.
அதாவது, பொது இடத்தில் ஆபத்தான வகையில் காரில் சாகசம் புரிந்ததற்காகவும், பொது சொத்துக்கு பங்கம் ஏற்படுத்தியதற்காகவும், சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு தெருக்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். தினமும் 4 மணிநேரம் வீதம் 30 நாட்களுக்கு அவர்கள் சாலைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
|
இந்த நூதன தண்டனை அவர்களுக்கு படிப்பினையை தரும் என்பதுடன், பிறருக்கும் அது பாடமாக அமையும் என்று கருதப்படுகிறது. அவர்கள் சாகசம் புரிந்த வீடியோவையும் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!