Just In
- 18 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்
இந்தியாவின் ஆட்கொல்லி நெடுஞ்சாலைகளில் தமிழகம் முதன்மை வகிக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
ஒரே இடத்தில் தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. ஒரு கிராமத்தையே விதவையாக்கிய தேசிய நெடுஞ்சாலை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் இனம் காணப்பட்டு, அவை கருப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதில், அதிக கருப்புப் பகுதிகளை கொண்ட நம் நாட்டின் டாப்- 5 தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது பேரதிர்ச்சியான விஷயம்.
05. சென்னை- தேனி
சென்னையிலிருந்து தேனியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் மொத்தம் 24 கருப்புப் பகுதிகள் உள்ளது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த சாலை ஓரத்தில் இருக்கும் 68 கிராமங்களுக்கு இந்த சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கும், சாலையில் செல்வதற்கும் எந்த ஒரு கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சாலையில் ஆண்டுக்கு 3,000க்கும் அதிகமான விபத்துக்கள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டிலேயே அதிக விபத்து அபாயம் கொண்ட சாலைகளில் சென்னை- தேனி தேசிய நெடுஞ்சாலையும் ஒன்று என்பது அதிர்ச்சி தரும் விஷயம்தான்.
04. சென்னை - தானே
டெல்லியிலிருந்து மும்பை மற்றும் பெங்களூர் வழியாக சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் சென்னை- தானே இடையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக கருப்புப் பகுதிகள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை- தானே இடையிலான 1,235 கிமீ தூர தேசிய நெடுஞ்சாலையில் 27 இடங்கள் கருப்புப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. அதிவேக வாகனங்களால் இந்த சாலையில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தினசரி சம்பவங்களாக மாறி விட்டன.
03. நாங்ஸ்டாயின்- சப்ரூம் சாலை
மேகாலயாவில் உள்ள நாங்ஸ்டாயின் என்ற இடத்திலிருந்து திரிபுராவில் உள்ள சப்ரூம் என்ற இடத்தை இணைக்கும் 622 கிமீ தூரமுடைய தேசிய நெடுஞ்சாலையில் 38 கருப்புப் பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் அமைந்துள்ள பெட்டகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்த 35 குடும்பங்களை சேர்ந்த 38 ஆண்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே, கிராமத்தை 'விதவைகளின் கிராமம்' என்று குறிப்பிடுகின்றனர். இன்றளவும் இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெறும் இடமாக பெட்டகுண்டா இருப்பது வேதனை அளிக்கும் விஷயம்.
04. டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலை
நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து வர்த்தக தலைநகர் மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையிலும் அதிக விபத்துக்கள் நடைபெறும் கருப்புப் பகுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் 45 கருப்புப் பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்டுக்கு சராசரியாக 3,000க்கும் மேற்பட்ட விபத்துக்களும், 200 உயிரிழப்புகளும் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஆட்கொல்லி தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
01. டெல்லி- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
டெல்லி- கொல்கத்தா இடையிலான தேசிய நெடுஞ்சாலைதான் நாட்டிலேயே அதிக கருப்புப் பகுதிகளை கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் 59 கருப்புப் பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பெறுகிறது. இந்த சாலையில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தினசரி வாடிக்கையாகி இருக்கிறது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!