Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசல் வண்டிகளின் கதை முடிகிறது! திடீர் முடிவை எடுத்த அரசு! எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க அதிரடி!
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசின் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநில அரசின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து எரிசக்தி துறை செயலாளர் சுரேஷ் குமார் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அவற்றை வாங்குவதில்லை. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், மக்கள் அவற்றை வாங்க தயங்குகின்றனர்'' என்றார். எனவே மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை தகர்த்து எறியும் வகையில்தான், அடுத்த 2 ஆண்டுகளில் 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
நான்கு லேன்களை கொண்டு நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் நகர பகுதிகளில், மூன்று சதுர கிலோ மீட்டர்களுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு முன் வருவார்கள் என மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
காற்று மாசுபாடு பிரச்னைக்கு காரணமாக உள்ள வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறும்பட்சத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுச்சூழலும் காக்கப்படும் என அரசு நம்புகிறது. மேற்கு வங்க மாநில அரசு மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதைதான் விரும்புகின்றன. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அவை முடுக்கி விட்டுள்ளன.
பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வரும் ஆர்வம் காரணமாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கூட அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த துறையில் சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் செயல்பாடு, பெரிய நிறுவனங்களையே பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த ஆதிக்கத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், நானோ காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது டாடா நானோ காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டால், இந்திய மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய 2 நிறுவனங்களும் ஏற்கனவே முறையே கோனா மற்றும் இஸட்எஸ் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்ள எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய அறிமுகங்களை செய்ய அவை தயாராகி கொண்டுள்ளன.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!