Just In
- 41 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மெக்சிகோவில் தாறுமாறாக பைக் ஓட்டி வந்த 6 வயது சிறுவனுக்கு அபராதம்
மெக்சிகோவிலுள்ள சியூதாத் ஜுரெஸ் நகரைச் சேர்ந்தவர் கர்லா நோரிகா. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது 6 வயது மகன் கேல் சான்டியாகோவுக்கு அழகிய குட்டி பைக்கை கர்லா பரிசாக வாங்கித் தந்தார்.
இந்த நிலையில், சிறுவன் கேல் அந்த பைக்கை எடுத்துக்கொண்டு தனது வீ்ட்டையொட்டிய சாலையில் ரவுண்டு சென்றுள்ளான். அப்போது, அங்கிருந்த சிக்னல் ஒன்றை அந்த சிறுவன் கடக்க முயன்றபோது எதிரே வந்த எஸ்யூவிகார் மீது பைக் மோதியது.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக சிறுவன் காயம் அடையவில்லை. இருப்பினும், தாறுமாறாக ரோட்டில் பைக் ஓட்டி வந்ததற்காக அந்த சிறுவனை எச்சரித்த போலீசார், அவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், லைசென்ஸ் இல்லாமல் பைக்கை ஓட்டி வந்ததற்காக, அந்த சிறுவனுக்கு 183 டாலரை (ரூ.9,000) போலீசார் அபராதமாக விதித்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்யூவியை ஓட்டி வந்த பெண் மீதும் தவறு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் தாயார் அபராதத்தை செலுத்தி அந்த குட்டி பைக்கை போலீசாரிடமிருந்து சிமீட்டு வந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு அபராதம் விதித்ததற்கு அந்த சிறுவனின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
6 வயதில் எப்படி லைசென்ஸ் பெற முடியும் என்றும், போலீசாரின் செயல் பொருத்தமானது அல்ல என்றும் சிறுவனின் தாயார் கர்லா கூறியுள்ளார். கடந்த மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து சமீபத்தில் சிறுவனின் தாயார் மீடியா மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.