Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹெல்மெட் அணியாததால் பறிபோகும் உயிர்கள்: கடும் நடவடிக்கைக்கு கோரிக்கை
சென்னையில், அடிக்கடி இதுபோன்று ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணி்க்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் அக்டோபர் வரை மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்ற 654 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், 547 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழப்போரில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கும்போது உடலின் பிற பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டால் கூட உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனால், தலையில் காயம் ஏற்படுவதால்தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் கேடயமாக பயன்படும் ஹெல்மெட் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு இல்லை.
சென்னையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டும் அதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதை மதிப்பதில்லை. ஏனெனில், 100 ரூபாய் என்ற அளவில் அபராதம் வசூலிக்கப்படுவதால் அதை வாகன ஓட்டிகள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
இதனால், ஒவ்வொரு மாதமும் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து 50 லட்சம் அபராதம் வசூலிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அபராத தொகை அதிகரிக்கிறதே தவிர, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நகரத்துக்குள் விடாமல் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். வீட்டுக்கு சென்று ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், அங்கு அபராதம் உள்ளிட்டவை இல்லாமலே ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அனைத்து ஊர்களிலும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எங்கு, எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாததே நிகழ்வே விபத்து. எனவே, ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனங்களை ஓட்டுங்கள்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி