ஏபிஎஸ் சகிதம் புதிய கேடிஎம் டியூக் 390 பைக் அறிமுகம்!
கேடிஎம் டியூக் 200 பைக்கின் வெற்றியை தொடர்ந்து தனது இரண்டாவது தயாரிப்பான டியூக் 390 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது கேடிஎம். இந்திய வாடிக்கையாளர்களை ஏமாற்றம் அளிக்காத வகையில், மிக சவாலான ஆரம்ப விலையில் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ்-கேடிஎம் புரோபைக்கிங் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த புதிய பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த பைக்கின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏபிஎஸ் ஸ்டான்டர்டு
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் நிரந்தர அம்சமாக கிடைக்கும் என்பது கூடுதல் விசேஷம்.

எஞ்சின்
இந்த பைக்கில் 43.5 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 373.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

எடை
இந்த பவர்ஃபுல் பைக் 145 கிலோ எடை கொண்டது.

ஸ்பெஷல் டயர்
கேடிஎம் டியூக் 200 பைக்கில் எம்ஆர்எஃப் டயர்களுடன் கிடைக்கும் நிலையில், இந்த பைக்கில் கிரிப்பி மெட்ஸெல்லர் ஸ்போர்டெக் எம்-5 என்ற பிரத்யே டயர்கள் நிரந்தர அம்சமாக இடம் பெற்றுள்ளது.

டாப் ஸ்பீடு
இந்த பைக் 0-100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் தொட்டுவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 165 கிமீ வேகம் வரை செல்லும்.

விலை
ரூ.1.80 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்பதிவு
இந்த புதிய பைக்குக்கு நாளை முதல் முன்பதிவு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








