ஹயோசங், பெனெல்லியை தொடர்ந்து சீன பைக் பிராண்டை அறிமுகப்படுத்தும் டிஎஸ்கே!
கீவே நிறுவனத்தின் பைக்குகளையும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.
தென்கொரியாவை சேர்ந்த ஹயோசங் பிரிமியம் பைக்குகளை இந்தியாவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிரிமியம் பைக்குகளையும் அறிமுகம் செய்தது.

இந்த பைக்குகள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த நிலையில், சீனாவை சேர்ந்த கீவே நிறுவனத்தின் பைக்குகளையும் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.
பெனெல்லி பைக் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் சீனாவை சேர்ந்த கியாங்ஜியாங் குழுமத்தின் கீழ்தான் இந்த கீவே நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. கீவே பிராண்டில் முதலாவதாக, பிளாக்ஸ்டார் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








