Just In
- 37 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பெனெல்லி மோட்டார் சைக்கள் நிறுவனம் திவாலானதாக அறிவித்த நீதிமன்றம்... காரணம் என்ன?
இத்தாலியைச் சேர்ந்த பெனெல்லி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அந்நாட்டில் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், விற்பனையையும் கொண்டுள்ளது. கேடிஎம் லிமிடெட்டின் துணை நிறுவனமான டபிள்யூபி சஸ்பென்ஸன் என்ற கம்பெனிதான் பெனெல்லி மோட்டார் சைக்கிள்களுக்குத் தேவையான சில பாகங்களை விநியோகித்து வந்தது.
இந்த நிலையில்தான் பெனெல்லி நிறுவனம் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியது. அதாவது, டபிள்யூபி சஸ்பென்ஸன் கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய தொகையைத் தராமல் நீண்ட நாள்களாக இழுத்தடித்து வந்ததாக பெனெல்லி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கிட்டத்தட்ட 1.20 லட்சம் யூரோ கடன் தொகை நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவு, கடைசியாக நீதிமன்றத்தில் போய் முடிந்திருக்கிறது. இத்தாலியின் பெசாரோ நீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையை டபிள்யூபி சஸ்பென்ஸன் நிறுவனத்துக்கு வழங்குமாறு பெனெல்லியிடம் அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம். அதன் பிறகும் உரிய தொகையை திருப்பித் தராததால் பெனெல்லி நிறுவனம் திவாலாகி விட்டதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறும் பெனெல்லி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவித்த பிறகு அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் கடன் தொகைக்காக பறிமுதல் செய்யப்படும். மேலும், பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட பெனெல்லி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு நடுவே பெனெல்லியின் தாய் நிறுவனமான குயான்ஜியாங் கம்பெனி இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளது. சீனாவில் செயல்படும் இந்த நிறுவனம், பெனெல்லி திவாலாகவில்லை என்றும், அதன் பொருளாதார நிலை சீராக இருக்கிறது என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.
பெசாரோ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் குயான்ஜியாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் இத்தாலி உள்பட சர்வதேச அளவில் பெனெல்லியின் பெயர் டேமேஜாகி உள்ளது. அதனை சரி செய்து மோட்டார் சைக்கிள் உலகில் மீண்டு(ம்) வருமா பெனெல்லி? என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும். இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் பிரிமியம் பைக் மாடல்களை பெனெல்லி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?