Just In
- 39 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 50 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சென்னையில் நடந்த தேசிய பைக் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!
சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஹோண்டா அணி வீரர்கள் அசத்தி இருக்கின்றனர். அதன் விபரங்களை காணலாம்.
சென்னையில் நேற்று நடந்த தேசிய பைக் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஹோண்டா அணிகளை சேர்ந்த ரைடர்கள் அசத்தினர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அகில இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனத்தின் சார்பில், தேசிய மோட்டார்சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள பந்தய களத்தில் நடந்தது.
இந்த பந்தயம் சூப்பர் ஸ்போர்ட் 165சிசி, புரோ ஸ்டாக் 165சிசி உள்ளிட்ட பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தின் இரண்டாவது தினமான நேற்று மொத்தம் 8 போடியம் இடங்களில் 5 இடங்களை ஹோண்டா அணியினர் கைப்பற்றினர்.
சூப்பர் ஸ்போர்ட்ஸ் 165சிசி பிரிவில் ஹோண்டா Ten 10 அணியின் ராஜீவ் சேது வெற்றி பெற்றார். அதே அணியின் மதன குமார் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். புரோ ஸ்டாக் 165சிசி பிரிவின் இறுதிச் சுற்றில் ஹோண்டா Ten 10 அணி வீரர் மிதுன் குமார் முதலிடம் பிடித்தார்.
இதனிடையே, தேசிய பைக் பந்தய சாம்பின்ஷிப் பந்தயத்தின் இடையில், ஹோண்டா நிறுவனம் தனது ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றை சென்னையில் நடத்தியது. ஹோண்டா சிபிஆர்250ஆர் ஓபன் மற்றும் ஹோண்டா சிபிஆர் 150 நோவிஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது.
முதல் பந்தயத்தில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஓபன் கிளாஸ் பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். பி. அர்விந்த் மற்றும் ராஜீவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
இரண்டாவது பந்தயத்தில் ராஜீவ் சேது முதலிடத்தை பிடித்தார். அனீஷ் ஷெட்டி மற்றும் பி.அர்விந்த் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர். சிபிஆர் 150 நோவிஸ் பிரிவில் சத்திய நாராயன் முதலிடத்தை பிடித்தார்.
இரண்டாவது இடத்தை அமலா ஜெரால்டும், மூன்றாவது இடத்தை வைசாக் சோபனும் பிடித்தனர். இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் கூறுகையில்," ஹோண்டா அணி வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் திறம்பட செயல்பட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்போர்ட்ஸ் பிரிவில் ராஜீவ் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அடுத்த சுற்றுகளிலும் எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்துவர் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
ஹோண்டா ஒன் மேக் பைக் பந்தயம் இந்தியாவின் இளம் தலைமுறை பைக் பந்தய வீரர்களை அடையாளும் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. ஹோண்டா ஒன் மேக் ரேஸ் அமைப்பு மூலமாக பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள், தேசிய பைக் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் திறம்பட செயல்பட்டது இந்த முடிவுகளின் மூலமாகவே தெரிய வந்துள்ளது.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!