Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் சென்னையில் நடக்கும் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் பைக் பந்தயம்!
ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 5வது சுற்று பைக் பந்தயம் சென்னையில் நடந்து வருகிறது.
ஆசிய பிராந்திய அளவிலான ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 5வது சுற்று பைக் பந்தயம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த பைக் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த சங்கர் சரத் குமார் மற்றும் ராஜீவ் சேது ஆகிய இரண்டு வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் முதல் தர பைக் பந்தயம் ஆசிய பிராந்திய நாடுகளில் பிரபலமானது. வேர்ல்டு பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்த பந்தயம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இந்த பந்தயம் மீண்டும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன பந்தய களத்தில் நடத்தப்படுகிறது. இந்த பைக் பந்தயத்தில் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம், தாய்பேய் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
நேற்று துவங்கிய இந்த போட்டிகள் நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. மூன்று பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. சூப்பர்ஸ்போர்ட்ஸ் 600சிசி, ஏசியா புரொடெக்ஷன் 250சிசி மற்றும் அண்டர்போன் 150சிசி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகின்றன.
மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் தலைவர் அஜித் தாமஸ் கூறுகையில்," மீண்டும் சென்னையில் ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். ஆசிய அளவில் சிறந்த வீரர்களை இனம் கண்டு சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு இந்த போட்டிகள் உதவும்," என்று கூறினார்.
இந்த போட்டிகள் மூலமாக இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் உலக அளவில் செல்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இந்த போட்டியில் பங்கேற்றிருக்கும் சங்கர் சரத், இந்த போட்டிகளை மிகுந்த எதிர்பார்ப்பையும், த்ரில்லையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மற்றொரு வீரரான ராஜீவ் சேது, இந்த போட்டிகளை பயிற்சி பட்டறை போலவே கருதுகிறேன். இந்த போட்டிகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டு மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார். நிச்சயம் இந்த போட்டிகள் இந்தியாவின் இளம் பைக் பந்தய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை நல்கி தரும் என்பதில் ஐயமில்லை.
சங்கர் சரத்குமார் மற்றும் ராஜீவ் சேது ஆகியோருக்கு ஹோண்டா நிறுவனம் ஸ்பான்சர் அளிக்கிறது. இந்த பைக் பந்தயத்தின்போதே ஹோண்டா ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியிலும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.