இந்தியாவில்3வது தொழிற்சாலையை தொடங்கிய ராயல் என்ஃபீல்டு... மீண்டும் சென்னையை தேர்வு செய்தது..!!.
இந்தியாவில்3வது தொழிற்சாலையை தொடங்கிய ராயல் என்ஃபீல்டு... மீண்டும் சென்னையை தேர்வு செய்தது..!!.
ஈச்சர் மோட்டார்ஸின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, சென்னை அருகே உள்ள வல்லம் வடகல் இடத்தில் தனது மூன்றாவது தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.

சென்னை அருகேயுள்ள வல்லம் வடகல் என்ற இடத்தில் ராயல் என்ஃபீல்டு தனது மூன்றாவது தொழிற்சாலையை பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், இந்திய மதிப்பில் ரூ.800 கோடி செலவில் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஆலையை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியுள்ளது.
Recommended Video


வல்லம் வடகல் ஆலையில் தயாராகும் அனைத்து வாகனங்களும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ராயல் என்ஃபீல்டு கூறியுள்ளது.

கடந்த 2014ல் சென்னை ஒரகடம் அருகே உள்ள வல்லம் வடகல் பகுதியில் இந்தியாவில் தனது மூன்றாவது தொழிற்சாலையை அமைப்பதற்காக ராயல் என்ஃபீல்டு இடத்தை தேர்வு செய்தது.

15 மாதங்களாக இந்த தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
2016-2017 நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 6,67,135 பைக்குகளை உற்பத்தி செய்துள்ளது.

புதிய ஆலை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், அந்நிறுவனத்தின் விற்பனை பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

201-18 நிதியாண்டில் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களில் உற்பத்தில் 8,25,000 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிற்கு சுமார் 3 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் வல்லம் வடகல் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என ராயல் என்ஃபீல்டு தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








