Just In
- 19 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...!
மோசமான நிலையில் உள்ள இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியான ஒரு சூழலில் வாகனங்களும் மோசமான நிலையில் இருந்தால், விபத்து நிகழ்வதை தவிர்ப்பது என்பது கடினம்தான்.
மோசமான நிலையில் உள்ள இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியான ஒரு சூழலில் வாகனங்களும் மோசமான நிலையில் இருந்தால், விபத்து நிகழ்வதை தவிர்ப்பது என்பது கடினம்தான். இதை எல்லாம் மனதில் வைத்து, எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்ட்டெம். இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் தெரிவித்துள்ளது.
1.4 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் மட்டும் 1.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதுமா? என கேட்காதீர்கள். இந்தியாவில் மட்டும். இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது எமனுக்கே சவால் விடுவதை போன்றது. கடந்த ஆண்டு உயிரிழந்த 1.4 லட்சம் பேரில், 35 சதவீதத்தினர் டூவீலர் விபத்தில் சிக்கியவர்கள்.
3.60 கோடி டூவீலர்கள்
இப்படியான ஒரு சூழ்நிலையில் வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம் நம்மை திகைப்பட வைக்கும். இந்தியாவில் தற்போதை நிலையில் ஒரு ஆண்டுக்கான டூவீலர் நுகர்வு 20 மில்லியனாக உள்ளது. அதாவது 2 கோடி டூவீலர்கள். இதே நிலையில் சென்றால், 2022-23ம் ஆண்டில் இந்தியாவின் டூவீலர் நுகர்வு 36 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 3.60 கோடி டூவீலர்கள். எனவே அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டூவீலர்களை தயாரிப்பது அவசியமாகிறது.
இந்திய நிறுவனத்தின் அசத்தல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமை இடமாக கொண்டு ஆர்ட்டெம் எனர்ஜி பியூச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகன டெக்னாலஜி நிறுவனமான ஆர்ட்டெம், எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், முன்னெப்போதும் இல்லாத ஏடிஏஎஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) சேர்க்கப்படவுள்ளது. ஏடிஏஎஸ் இதற்கு முன்பாக விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர்
இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 90 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 6 வினாடிகளில் எட்டலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? என்பதில் உள்ள பயம்தான், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறுவதில் நமக்கு இருக்கும் பிரச்னை. அந்த பிரச்னையை களையும் விதமாக எம் 9 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் பயணிக்கலாம்.
எக்கச்சக்க வசதிகள்
டிரைவரின் தவறு மற்றும் கவனக்குறைவு ஆகிய காரணங்களினாலேயே பெரும்பாலான டூவீலர் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதை தவிர்க்கும் வகையிலான அம்சங்களில் ஆர்ட்டெம் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது சிறப்பான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்க டிரைவருக்கு உதவி செய்யும் வகையிலான எச்சரிக்கை அறிவிப்புகளை எம் 9 அளித்து கொண்டே இருக்கும். நமக்கு மிகவும் நெருக்கமாக ஏதாவது வாகனம் சென்றால், அது தொடர்பான எச்சரிக்கையை எம் 9 உடனடியாக அளித்து விடும். வளைவில் திரும்பி முடித்த உடன், இன்டிகேட்டர்கள் தானாக ஆப் செய்யப்பட்டு விடும். இதற்கான சென்சார்கள் எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படவுள்ளன. எலக்ட்ரோ டைனமிக் பிரேக்கிங் (இடிபி), ஸ்மார்ட் ஹெல்மெட் என இதன் வசதிகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.
அவசர கால மெசேஜ்
விபத்து நிகழ்ந்த உடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததாலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அந்த குறையை போக்கும் வகையில் எம் 9 செயல்படும். ஒரு வேளை விபத்து நிகழ்ந்து விட்டால், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 5 தொலைபேசி எண்களுக்கு, அது தொடர்பான மெசேஜ்களையும் எம் 9 தானாகவே வழங்கி விடும்.
எப்போது விற்பனைக்கு வரும்?
ஆர்ட்டெம் எம் 9 விற்பனைக்கு வரும் காலம் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகையில், மிக அதிக விலை கொண்டதாக ஆர்ட்டெம் எம் 9 இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!