Just In
- 43 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வரும் 5ம் தேதி அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர்
பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் ஏத்தர் எஸ்340 என்ற ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இதற்கான பஸ்ட் லுக் வெளியான போதே மக்கள் மத்தியில் ஏகே பித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த
பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் ஏத்தர் எஸ்340 என்ற ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இதற்கான பஸ்ட் லுக் வெளியான போதே மக்கள் மத்தியில் ஏகே பித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் தேதி வெளியாகியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் வரும் 5ம் தேதி முதல் விற்பனைக்க வருகிறது. இது தான் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக வெளி வருகிறது. இதில் பல உயர்ரக தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் எலக்ரிக் பேட்டரியில் இயங்ககூடியது. ஆனால் இந்தியாவில் அதிக சார்ஜ் ஏற்றும் மையங்கள் இல்லாததால் இந்த ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகாது என அந்நிறுவனம் கருதியது.
இதையடுத்து இந்த பைக்கை முதற்கட்டமாக பெங்களுருவில் மட்டும் விற்பனை செய்வது எனவும், அதற்கு முன்னர் பெங்களூருவில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு கடந்து வாரம் சார்ஜ் ஏற்றும் மையங்களும் நிறுவப்பட்டது.
இதையடுத்து இந்த பைக்கை முதற்கட்டமாக பெங்களுருவில் மட்டும் விற்பனை செய்வது எனவும், அதற்கு முன்னர் பெங்களூருவில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு கடந்து வாரம் சார்ஜ் ஏற்றும் மையங்களும் நிறுவப்பட்டது.
அதில் ஏத்தர் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாமல் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையோ அல்லது கார்களையோ சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். இதையடுத்து தனது தயாரிப்பான ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டரை வரும் 5ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.
ஏத்தர் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு 55 பைக்குகளை டிசைன் செய்துள்ளது. அதன் மூலம் இதுவரை 50,000 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தயாரித்துள்ள ஏத்தர் ஸ்கூட்டருக்கு தற்போதே பல சப்ளையர்கள் மற்றம் டீலர்கள் தொடர்பு கொள்ள துவங்கி விட்டது.
இந்த பைக் முழுவதும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓயிட் பீல்டு என்ற ஏரியாவில்தான் அசம்பிள் செய்யப்படுகிறது. இந்த பைக்கை பொரத்த வரை ஐபி 67 வாட்டர் ப்ரூப் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. வரை எடுத்து செல்லும், மேலும் பைக்கில் 72 கிமீ. வேகத்தில் செல்லலாம்.
ஆனால் 40 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் தான் முழு பேட்டரி சார்ஜில் 80 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும். மேலும் இந்த பைக்கில் உள்ள பேட்டரியும், 50,000 கி.மீ. அல்லது 5-6 வருடம் வரை உழைக்கும் திறன் படைத்தது. மேலும் இந்த பைக் 1 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜூம், 3 மணி நேரத்தில் முழு சார்ஜூம் பெற்று விடும்.
இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஹைடெக் எல்இடி கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பைக்கில் இது போன்ற கன்சோல் பொருத்தப்படும் முதல் பைக் இது தான். மேலும் இது க்ளவுட் கனெக்டட் ஆக செயல்படும்.
இதனால் தற்போது அதில் உள்ள டேட்டாக்கள் எல்லாம் க்ளவுடில் பதிவாகியிருக்கும். அதை பின்னர் வாடிக்கையாகளர்கள் பார்த்து கொள்ளலாம். உதாரணமாக இந்த பைக்க எந்த வழியாக சென்றது என்ற மேப் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். அதில் பதிவானதை நாம் பார்க்க முடியும்.
மேலும் இந்த பைக்கில் ஓடிய எனப்படும் ஓவர் தி ஏர் என்ற முறையில் சாப்வேர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் அடுத்த அப்பேட்டை பெரும் போது இந்த பைக்கில் பொருத்தப்பட்ட சாப்வேரிலும் நாம் அப்டேட்களை பெற முடியும்.
இந்த பைக் வரும் 5ம் தேதி அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கான புக்கிங்கும் துவங்குகிறது. தெடார்ந்து ஜூலை மாதம் இந்த பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை அறிமுக நாள் அன்றே வெளியிடப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்