Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி
தரமில்லா ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றம் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ்தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவு
தரமில்லாத ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ் தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலத்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் தான் ஹெல்மெட் தயாரிப்பின் விதிமுறைகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய சாலைபேக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி டூவீலருக்கான தயாரிக்கப்படும் ஹெல்மெட்களில் ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை தயாரிக்கவோ, ஸ்டாக் வைக்கவோ, விற்கவோ கூடாது என்று அறிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது 2 லட்சம் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தான் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டுஸ் (BIS) சார்பில் ஹெல்மெட் தயாரிப்பு குறித்த சில விதிமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிஐஎஸ் செய்யத விதிமுறை மாற்றத்தின் படி டூவீலர்களுக்காக தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் அதிகபட்ச எடையை 1.2 கிலோவாக குறைந்தது. முன்னர் இதன் அதிகபட்ச எடையாக 1.5 கிலோ என இருந்தது.
தற்போது உள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது விற்கப்படும் அனைத்து ஹெல்மெட்களும் பிஐஎஸ் தரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் எல்லாம் எவ்வளவு தாக்கத்தை தாங்குகிறது என்பது டெஸ்ட் செய்யப்படுகிறது. இந்த டெஸ்ட் பல்வேறு வெப்ப சூழ்நிலைகளிலும், ஈரப்பத சூழ்நிலையிலும் டெஸ்ட் செய்யப்படுகிறது.
இதில் தாக்கத்தை தாங்கும் திறன். நீடித்து உழைக்கும் திறன், உராய்வின் போது எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் திறன். விபத்தில் போது ஹெல்மெட் எளிதாக கழண்டு செல்ல வாய்ப்புள்ளதா என்பதை அறியும் டெஸ்ட். ஆகியன பரிசோதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பெரும்பகுதியில் ரோட்டோரங்களில் தரம் இல்லாத ஹெல்மெட்களின் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஹெல்மெட்களும் அதிகமாக மக்கள் மத்தியில் வாங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டிராபிக் போலீசிடம் இருந்து ஹெல்மெட் போடாமல் சென்றால் போடப்படும் அபராதத்தில் இருந்து தப்பிக்க இதை மக்கள் செய்து வருகின்றனர்
இது குறித்து ஆசியாவின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் பேர்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் கபூர் கூறுகையில் :" அரசின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை மார்கெட்டில் இருந்து நீக்க இது சிறப்பான நடவடிக்கை தான்.
தற்போது பெரிய பெரிய நிறுவனங்கள் சிலர் ஹெல்மெட்களை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். அவர்களும் இனி ஐஎஸ்ஐ தரத்திற்கு உட்பட்டே ஹெல்மெட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்." இவ்வாறு கூறினார்.
விலை குறைந்த ஹெல்மெட்கள் மட்டும் அல்ல விலை உயர்ந்த சில ரக ஹெல்மெட்களும் ஐஎஸ்ஐ தரத்தை உறுதி செய்யவில்லை. நீங்கள் தற்போது ஹெல்மெட் வாங்குகிறீர்கள் என்றால் ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட்டை வாங்குகிறீர்களா என்பதை ஆய்வு செய்து பின் வாங்குங்கள்.நீங்கள் வாங்கும் ஹெல்மெட்டில் கூர்மையான பாகங்கள், ஊசி போன்ற வடிவம் இருந்தால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும் எச்சரிக்கை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!