Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்பட 10 மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள்தான், மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. கேரள மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1924ம் ஆண்டுக்கு பிறகு, கேரள மாநிலம் எதிர்கொள்ளும் 2வது மிகப்பெரிய வெள்ள பேரிடராக இது கருதப்படுகிறது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதத்தை சரி செய்ய வசதியாக, அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர், நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த பட்டியலில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் இணைந்துள்ளது. கேரள முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலை, கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சமூக பிரிவான சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட்டின் (SST) தலைமை செயல் அதிகாரி ஸ்வரன் சிங், கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து ஸ்வரன் சிங் கூறுகையில், ''கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருபவர்களுக்கு உதவுவதுதான் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நோக்கம். கேரள மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். அங்கு நிலைமை வெகு விரைவில் சீராகும்'' என்றார்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிவாரண நிதி வழங்குவது இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!