Just In
- 56 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
"பொறியியல் படிப்பில்லை, தொழிற்சாலை இல்லை" சொந்தமாக மின்சார சைக்கிளை உருவாக்கிய விவசாயி!
பொறியியல் படிப்பு, சொந்தமாக தொழிற்சாலை என எதுவுமே இல்லாமல் விவசாயி ஒருவர் சொந்தமாக பேட்டரியால் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய தேடல்களில் ஒன்றாக மின்சார வாகனம் மாறியுள்ளது. இவை, எரிபொருள் வாகனங்களைப் போன்று அல்லாமல் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும்.
இதன்காரணமாக, இந்தியா முழுவதும் மின்வாகனங்களை ஆளுகை செய்கின்ற வகையிலான முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், பவுத் பகுதியில் உள்ள பமந்தா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது சொந்த முயற்சியில் சாதாரண மிதிவண்டியை, பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிளாக மாற்றியமைத்துள்ளார்.
அவரின் பெயர் திலிப் மொஹபத்ரா என தெரிவந்துள்ளது. இவர், விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பியுள்ளார். ஆட்டோமொபைல் துறையைப் பற்றி எதுவும் அறியாத இவர், மிகவும் மலிவான விலையில் ஓர் பேட்டரி சைக்கிளை உருவாக்கியுள்ளார்.
இதற்காக அவர் தனியாக தொழிற்சாலையையோ அல்லது அதற்கு தேவையான எந்தவொரு உபகரணத்தையே கையாளவில்லை.
ஆனால், தன்னால் எந்தவொரு காரியத்தையும் எளிதில் செய்துகாட்ட முடியும் என்பதை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த முயற்சியை செய்து காட்டியுள்ளார்.
விவசாயியின் இந்த அதீத திறனை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டு வகையில் உள்ளூர் டிவி சேனலான ஓம்காம், அதுகுறித்த செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சாதாரணமாக ஓர் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வாங்க வேண்டுமானால், குறைந்தது ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஏன், நம் நாட்டில் கார்களுக்கு இணையான தொகையில் கூட மின்சார சைக்கிள்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி திலிப் மொஹபத்ரா, தற்போது உருவாக்கியுள்ள சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதேசமயம், மிகப்பெரிய நிறுவனங்களின் பிராண்டு பெயரில் விற்பனையாகும் இ-சைக்கிள்களுக்கு நிகரான திறனை, விவசாயியின் இந்த முயற்சியால் மின்சார சைக்கிளாக அவதாரம் எடுத்துள்ள சைக்கிளும் வழங்குகின்றது.
அந்தவகையில், அது அதிகபட்சமாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. அத்துடன், ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ தூரம் செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
இதற்காக அவர், 12 வோல்ட் திறன் கொண்ட பேட்டரியையும் 35 வாட் திறன் கொண்ட மின் மோட்டாரையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இதனை டெல்லியில் உள்ள தனியார் மின்வாகன விற்பனையகத்தில் வாங்கியதாக அவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன், சைக்கிளுக்கு தேவையான ஆக்ஸலேட்டர், வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவற்றையும் அவர் தனியார் கடைகளிலேயே வாங்கியுள்ளார்.
இந்த உருமாற்றம் பெற்ற சைக்கிள் திலிப் மொஹபத்ராவின் இயலாத காலத்தில் நல்ல பயனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் அவதிபட்டு வந்த அவர், இந்த சைக்கிள் வந்த பின்னர் அவையனைத்தும் எளிதாக மாறியுள்ளது என பெருமிதம் கொள்கின்றார்.
அதேசமயம், இந்த சைக்கிளால் அவர் பலனடைவது மட்டுமின்றி மற்ற ஏழை, எளிய முதியோர்களுக்கும் லிஃப்ட் கொடுத்து உதவி புரிந்து வருகின்றார். மேலும், முந்தையக் காலங்களைக் காட்டிலும், தற்போது சற்று வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் அவர் செயல்பட்டு வருகின்றார்.
மொஹபத்ராவின் இந்த சைக்கிளை இயக்க பதிவெண், ஆர்சி புக், லைசென்ஸ் என எதுவும் தேவையில்லை. அதேபோன்று, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால், நம்முடைய பொதுநலனுக்காக பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.
திலிப் மொஹபத்ரா இந்த முயற்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருப்பது, அவரின் ஊரில் பேருந்து வசதி போதுமானதாக இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. தன்னுடைய கிராமத்தில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்ல மிதிவண்டி சைக்கிளையே அவர் நம்பியிருந்தார். இதனால், பெரும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தார். எனவே, இதனை சுலபமாக்கிக் கொள்ளும் விதமாக, சாதாரண சைக்கிளை, மின்சார சைக்கிளாக உருமாற்றியுள்ளார்.
அவர், தான் மட்டும் இந்த பலனை அனுபவிக்காமல், தன்னுடைய ஊர் மக்களும் இந்த பலனை அடைய விரும்புகின்றார். இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், அவருடைய நிதி பற்றாக்குறை அவருக்கு பெரும் தடையாக இருப்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350