Just In
- 9 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!
விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை போராடி வரும் நிலையில், இந்தியாவின் மிக பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், வருகிற தீபாவளி பண்டிகையின்போது, தங்களது விற்பனை வளர்ச்சியை 10 சதவீதம் அதிகரிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை வெகுவாக குறைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த சலுகையும் ஹீரோ மோட்டார் நிறுவனம் தைரியமாக வரும் பண்டிக்கையில் முதலீடு செய்வதற்கு தூண்டுதலாக அமைவதாக கோவாவில் நடந்த இந்நிறுவனத்தின் டீலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற டீலர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் அதிகப்படியான சலுகைகளையும் இலவச திட்டங்களையும் வருகிற பண்டிகை நாட்களில் அள்ளி கொடுக்க விரும்பவில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பட்ஜெட் வாகனங்களையே விற்பனை செய்யவுள்ளோம். ஓரளவு கூடுதல் விற்பனை சதவீதம் அதிகரித்தாலே போதும்," என தெரிவித்தார்.
இதன் மூலம் ஹீரோ மோட்டார் நிறுவனம், பண்டிகை நாட்கள் முடிந்து 30 நாட்கள் கழித்து மீண்டும் பழைய இயல்பான விற்பனை நிலைக்கு வந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது போல தான் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில், "நாங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் முதலீடுகளை சில காலமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் வரும் நிதி ஆண்டில் மூன்று ப்ரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு ஸ்கூட்டர்கள் உள்பட ஐந்து புதிய தயாரிப்புகளை ஐந்து மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம்," என கூறினார்.
அந்த ஐந்து தயாரிப்புகள் என்னென்ன என்பதையும் கூறிய அவர், எக்ஸ்-பல்ஸ் ட்வின்ஸ், எக்ஸ்ட்ரீம் 200எஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125எஃப்ஐ, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் மற்றும் பிளஸர்+ 110 ஸ்கூட்டர் என்றார்.
மேலும், பிஎஸ்-விஐ மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என்பதையும் அவர் தெரிவித்தார். இந்த மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கலந்துகொண்டார்.
ஹீரோ மோட்டார் நிறுவனம் தான் முதன்முதலாக பிஎஸ்-6 சான்றிதழை ஆட்டோமோடிவ் டெக்னாலஜியின் இண்டர்நேஷனல் மையத்திடம் இருந்து வாங்கியது. மேலும் ஏற்கனவே சில டீலர்களுக்கு ஸ்ப்லெண்டோர் ஐ-ஸ்மார்ட் பைக்கையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா