Just In
- 16 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை முதல்முறையாக ராயல் என்ஃபீல்டு உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மின்சார வாகனத் தயாரிப்பில் அனைத்து வாகன நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பு குறித்து எந்த தகவலும இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை அந்நிறுவனத்தின் சிஇஓ வினோத் தாசரி உறுதிப்படுத்தி உள்ளார்.
ஜாவா, பெனெல்லி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கடுமையான சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டத்திற்கு வர்த்தகத்தை கொண்டு செல்வதற்கான பணிகளில் ராயல் என்ஃபீல்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடல்ககளை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுவடையத் துவங்கி இருக்கிறது.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் இல்லாமல் வர்த்தகத்தை தொடர்ந்து வலுவாக கொண்டு செல்ல முடியாது. பல நிறுவனங்கள் இப்போதே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த விலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட்டை மனதில் வைத்து புதிய மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கப் பணிகளுக்காக ரூ.700 கோடியை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்தது.
இந்த முதலீட்டை பயன்படுத்தி, மின்சார மோட்டார்சைக்கிள் மாடலின் உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் உறுதியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு தக்கவாறு, சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
அதேநேரத்தில், இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சோதனைகளுக்கு உட்படுத்தி சந்தைக்கு கொண்டு வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. அதாவது, வரும் 2022-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் மூன்று ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பும் ஓரளவு வலுப்பெற்றிருக்கும். அப்போது அறிமுகம் செய்தால் சந்தையின் வர்த்தக ஓடத்திற்கு இணையாக செல்ல முடியும் என்று ராயல் என்ஃபீல்டு கருதுகிறது.
Source: ET Auto
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!