Just In
- 50 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 56 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..!
சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய அறிமுகமான ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடல் பைக்குகள் போலீஸாருக்காக புது வேடம் ஒன்றை அணிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம், புத்தம் புதிய ஸ்டைலிலான ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை கடந்த மே மாதம் 20 தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும், அன்றைய தினமே அந்த பைக்கை விற்பனைக்கும் அறிவித்தது.
கூடுதல் கவர்ச்சியான வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பைக்கிற்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
முன்னதாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்நிறுவனத்திற்கு ஜிக்ஸெரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் தற்போது நல்ல சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
ஆகையால், நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் சுஸுகி ஜிக்ஸெர் வரிசையில் உள்ள பைக்குகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.
இந்நிலையில், சுஸுகி நிறுவனம் சிஎஸ்ஆர் செயல்பாட்டின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதி போக்குவரத்து போலீஸாரின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய பத்து ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகளை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள்கள் போலீஸாரின் போக்குவரத்து பணியின்போது உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்த இருசக்கர வாகனங்களுக்கான சாவிகள் அனைத்தையும் குருகிராம் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் காவலர்கள் அனைவருக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வழங்கினர்.
சுஸுகி நிறுவனம் இதுபோன்று பைக்குகளை போலீஸாரின் பணிகளுக்கு வழங்குவது முதல் முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டிலும் இதுபோல சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்குகள் வழங்கப்பட்டன. அவை, சட்ட ஒழுங்கு போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு, ஒட்டுமொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சாலை பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலை கவசங்களும் அதே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள பைக்குகள் அனைத்தும், அவசர காலங்களில் அவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நீளமான வின்ட் ஷீல்டுகள், பக்கவாட்டு பகுதியில் உபகரணங்களை கையாளுகின்ற வகையிலான பெட்டி, போலீஸ் என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன், காவலர்கள் வாகனங்களில் காணப்படும் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் அடங்கிய மின் விளக்குகளும் பைக்கின் முன் மற்றும் பின்பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்குகள் போலீஸாரின் பயன்பாட்டிற்காக மேற்கூறியது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று தனித்துவமான லுக்கைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், எஞ்ஜின் மற்றும் செயல்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகள் எத்தகைய திறனைப் பெற்றிருக்கின்றதோ, அதே திறனைதான் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பைக்குகளும் வெளிப்படுத்தும்.
சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் அதீத சக்தியை வெளிப்படுத்துகின்ற வகையில் 249சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பைக் கொண்டதாகும். மேலும், இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்