Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மழைக்கு முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?
மழைக்காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், யமஹா நிறுவனம், சர்வீஸ் கேம்ப் ஒன்றை தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் மழைக் காலம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவை நாட்டின் சில பகுதிகளில் மழைக் காலம் முன் கூட்டியே துவங்கிவிட்டது. இந்நிலையில், யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், மழைக் காலத்திற்கு முன் கூட்டியே, அதன் பைக்குகளை செக் அப் செய்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மோட்டாராய்டு ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
யமஹா நிறுவனம், இந்த கேம்பினை நாடு முழுவதும் உள்ள அதன் டீலர்கள் மூலம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த கேம்ப் நாளை முதல் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மழைக் காலத்தில் கவனிக்க வேண்டிய 14 முக்கிய புள்ளிகள் அடிப்படையிலான இலவச செக் அப் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த 14 புள்ளிகள் அடிப்படையிலான இலவச பரிசோதனையுடன், வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், ஹெல்மெட், உதிரிபாகங்கள், குறைவான லேபர் சார்ஜ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதில் யமஹா நிறுவனம் சிறப்பான பங்கினை ஆற்றி வருகிறது.
அவ்வாறு வாடிக்கையாளர்களை சிறப்பானை சேவையை அளிக்கும் விதமாக, அந்த நிறுவனம், நாடு முழுவதும் 2,200 வாடிக்கையாளர்கள் டச் பாயிண்டையும், 500 டீலர்களையும் நிர்வகித்து வருகின்றது. மேலும், இந்த நிறுவனம் நாட்டில் மூன்று உற்பத்தி தொழிற்சாலையை இயக்கி வருகிறது.
உபி மாநிலத்தின் சூரஜ்பூரிலும், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இந்த நிறுவனம், பைக்குகளை உற்பத்திச் செய்து வருகின்றது. இங்கிருந்துதான் உள்நாட்டு தேவைக்காகவும், வெளிநாடுகளின் ஏற்றுமதிக்காவும் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
யமஹா நிறுவனத்தின் இந்த சிறப்பு கேம்ப் குறித்து அந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணைத் தலைவர் ரவீந்தர் சிங் கூறியாதவது, "இருசக்கர வாகன உற்பத்தியாளரின் ஓர் பொறுப்பாக, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியினை யமஹா நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "யமஹா நிறுவனத்தின் பைக்குகளில் பாதுகாப்பு குறைவான பாகங்கள், மிக குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பரிசோதனை முகாம், மழைக் காலங்களில் ரைடருக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க உதவும். அதற்கேற்ப, சலுகை விலையில் சர்வீஸ் மற்றும் மலிவு விலையில் பாகங்கள் உள்ளிட்டவற்றை மழைக் காலத்திற்கு முன்னதாகவே மாற்றிக் கொடுக்கும் வகையில் இந்த கேம்ப் நடைபெற இருக்கின்றது" என தெரிவித்தார்.
யமஹா நிறுவனம், அண்மையில் அதன் புதிய தயாரிப்பான எம்டி15 பைக்கின் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் ஹெல்மெட் அல்லது ரைடிங் ஜாக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. அவ்வாறு, முன்னதாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எம்டி15 பைக்கை வாங்கிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
155சிசி திறன்கொண்ட எம்டி15 பைக்கை யமஹா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்தே இந்த இலவசங்களை வழங்க யமஹா நிறுவனம் திட்டமிட்டது. சிங்கிள் எஃப்ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் எஞ்ஜின்கள் 19.3 பிஎஸ் பவரையும், 15 என்எம் டார்க்கையுவம் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இது ரூ.1.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?