Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!
2023ஆம் ஆண்டிற்குள் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி390 பைக்குகளுக்கு போட்டி மாடல்களை அப்ரில்லா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
பியாஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்காக கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்துள்ளது. அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மோட்டார்சைக்கிளின் அறிமுகம் மட்டுமின்றி இந்தியாவிற்காக பிராண்டின் புதிய மோட்டார்சைக்கிள் ப்ளாட்ஃபாரத்தை வடிவமைக்கும் பணியிலும் ஈடுப்பட்டு வருவதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.
இதன்படி அப்ரில்லா பிராண்டில் இருந்து 350சிசி- 450சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள்கள் வெளிவரவுள்ளன. 2022-23களில் வெளிவரவுள்ள இந்த அப்ரில்லா பைக்குகள் தற்சமயம் கான்செப்ட் வடிவில்தான் உள்ளதாகவும் பியாஜியோ நிறுவனம் கூறுகிறது.
இந்த தகவல்களை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் சிஇஒ டியாகோ க்ராஃபி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஆர்எஸ்150 மற்றும் டுவோனோ 150 பைக்குகளை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பியாஜியோ நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.
ஆனால் இப்போதுவரையில் இந்த 150சிசி பைக்குகளின் அறிமுகம் குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் பியாஜியோ நிறுவனத்தில் இருந்து வெளிவரவில்லை. ஏனெனில் அவற்றில் இருந்து இந்திய சந்தை அதிக திறன் கொண்ட 300சிசி-400சிசி பைக்குகளுக்கு மாறி வருவதாக இந்த நிறுவனம் நம்புகிறது.
மேலும் இந்த வருங்கால பைக்குகள் இத்தாலியில் உள்ள குழுவினரால் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் அவை இந்தியாவில்தான் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பியாஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தில் இந்த மோட்டார்சைக்கிள்களில் டுவோனோ 1100 மற்றும் ஆர்எஸ்வி4 பைக்குகளில் உள்ள இன்-லைன்கள் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் அவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகளை கேடிஎம் 390ட்யூக்/ ஆர்சி390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளுக்கு இணையானதாக பியாஜியோ நிறுவனம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக ஆர்எஸ்660 பைக்கின் இந்திய அறிமுகத்தை பியாஜியோ உறுதிப்படுத்தி இருந்தது. 2021ஆம் ஆண்டின் மத்தியில் சிபியூ முறையில் இந்தியாவில் இறக்குமதியாகவுள்ள இந்த அப்ரில்லா பைக்கிற்கு கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.
Note: Images are representative purpose only.