Just In
- 10 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
சூப்பரான ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டருக்காக வெயிட்டிங்கா? உங்களுக்குத்தான் இந்த செய்தி
பிரம்மாண்ட தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர் மற்றும் சூப்பர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை மிக வலுவானதாக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக பல புதிய ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, எஸ்எக்ஸ்ஆர்160 என்ற பிரம்மாண்ட தோற்றம் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆகஸ்ட்- செப்டம்பர் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் இதன் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் மட்டுமின்றி, எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் முகப்பு மிகவும் பிரம்மாண்டமான அப்ரான் அமைப்புடன் கவர்கிறது. பிளவுபட்ட க்ளஸ்ட்டர்கள் கொண்ட் ஹெட்லைட் அமைப்பு மற்றும் பகல்நேர விளக்குகள், பெரிய வைசர் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள், வலிமையான தோற்றத்தை வழங்கும் புகைப்போக்கிக் குழாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அகலமான இருக்கைகள், யுஎஸ்பி சார்ஜர், வசதியான ஸ்டோரேஜ் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பிஎஸ6 தரத்திற்கு இணையான 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.8 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் இருக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படும்.