Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை என அனைத்திலும் பெனெல்லி நிறுவனத்தின் பைக் மாடல்கள் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பெனெல்லி ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது திருச்சி மாநகரில் புதிய பைக் ஷோரூமை பெனெல்லி நிறுவனம் திறந்துள்ளது. கரூர் பைபாஸ் சாலையில் விக்ரம் பிளாஸா என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.

திருச்சியில் புதிய ஷோரூம் திறப்பு குறித்து பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபா கூறுகையில்,"நாடுமுழுவதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில் புதிய டீலர்களை திறந்து வருகிறோம். திருச்சியில் புதிய டீலர்ஷிப் திறப்பு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை அனுபவத்தை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். திருச்சி டீலரில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவை அனுபவத்தை உணர்வார்கள்.

நாடு முழுவதும் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றை வழங்கும் 3எஸ் ஷோரூம்களை திறப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இது வெறும் பைக் ஷோரூமாக மட்டுமில்லாமல், பைக் பிரியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமையும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஷோரூமில் பெனெல்லி 302ஆர், டிஎன்டி 300 மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்பீரியல் 400 பிஎஸ்-6 மாடல் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடலுக்கு ரூ.6,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கிற்கு ரூ.4,999 மாதத் தவணை கொண்ட கடன் திட்டமும் வழங்கப்படுகிறது. இம்பீரியல் 400 பைக்கின் விலையில் 85 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருச்சி பெனெல்லி ஷோரூமை நேரில் அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.