Just In
- 7 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 26 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 4 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
Don't Miss!
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை என அனைத்திலும் பெனெல்லி நிறுவனத்தின் பைக் மாடல்கள் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பெனெல்லி ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது திருச்சி மாநகரில் புதிய பைக் ஷோரூமை பெனெல்லி நிறுவனம் திறந்துள்ளது. கரூர் பைபாஸ் சாலையில் விக்ரம் பிளாஸா என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.
திருச்சியில் புதிய ஷோரூம் திறப்பு குறித்து பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபா கூறுகையில்,"நாடுமுழுவதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில் புதிய டீலர்களை திறந்து வருகிறோம். திருச்சியில் புதிய டீலர்ஷிப் திறப்பு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை அனுபவத்தை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். திருச்சி டீலரில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவை அனுபவத்தை உணர்வார்கள்.
நாடு முழுவதும் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றை வழங்கும் 3எஸ் ஷோரூம்களை திறப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இது வெறும் பைக் ஷோரூமாக மட்டுமில்லாமல், பைக் பிரியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமையும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஷோரூமில் பெனெல்லி 302ஆர், டிஎன்டி 300 மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்பீரியல் 400 பிஎஸ்-6 மாடல் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடலுக்கு ரூ.6,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.
புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கிற்கு ரூ.4,999 மாதத் தவணை கொண்ட கடன் திட்டமும் வழங்கப்படுகிறது. இம்பீரியல் 400 பைக்கின் விலையில் 85 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருச்சி பெனெல்லி ஷோரூமை நேரில் அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.