Just In
- 6 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 45 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இரு மாவட்டங்களில் ஹீரோ - ஹோண்டா இருசக்கர வாகன விற்பனைக்கு தடை... காரணத்தை கேட்டு கடுப்பான ஃபடா!
இந்தியாவின் குறிப்பிட்ட இரு மாவட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.
ஒரு காலத்தில் சகோதரர்களைபோல் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்து ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது தனி-தனியாக செயல்பட்டு வருகின்றன. சில குறிப்பிட்ட காரணங்களால் இவை கடந்த சில வருடங்களுக்கு முன்பே பிரிந்தன. தற்போது தனித்து செயல்பட்டு வருகின்றன.
இரு நிறுவனங்களும் பிரிந்தாலும் மக்கள் மத்தியில் முன்பு நிலவி வந்த அதே வரவேற்பு தற்போதும் எவ்வித குறைச்சலுமின்றி கிடைத்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவின் குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் மட்டும் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களுக்குமே தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்திலேயே இந்த அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ராய்பூர் மற்றும் காரியாபண்ட் இவ்விரு மாவட்டங்களிலேயே ஹோண்டா மற்றும் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் டீலர்களுக்கு புதிய வாகனத்தை விற்க தடை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாநிலத்தின் போக்குவரத்துத்துறையிடம் இருந்து புதிய மாடல்களின் விற்பனைக்கான ஒப்புதலைப் பெறாத காரணத்தினாலேயே இந்த தடை ஏற்பட்டிருக்கின்றது. இரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பிராண்டிற்கும் தலா 4 விற்பனையகங்கள் என சுமார் 8 விநியோகஸ்தர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் புதிய மாடலை விற்பனைச் செய்வதற்கான ஒப்புதலை மாநில போக்குவரத்துத்துறையிடம் இருந்து பெற தவறியிருக்கின்றனர். அண்மையில் புதிய பிஎஸ்-6 விதி அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த தரத்திலான வாகனங்களின் விற்பனைக்கே இவர்கள் உரிமம் பெற தவறியிருக்கின்றனர்.
இதன் காரணத்தினாலயே இரு மாவட்டங்களிலும் செயல்படும் ஹோண்டா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இரு நிறுவன விற்பனையாளர்களும் விநோத விற்பனைத் தடையைப் பெற்றிருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எஃப்ஏடிஏ (FADA)-வின் தலைவர் விங்கேஷ் குலாத்தி, இடி ஆட்டோ செய்தி தளத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், "இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது. புதிய வாகனங்களை விற்க மாநில வாரியாக அங்கீகாரம் பெறுவது அவசியம் இல்லை என மத்திய அரசு கூறியிருக்கின்றது. இதனை அராய் அமைப்பும் ஏற்றுக் கொண்டது. இம்மாதிரியான சூழ்நிலையில் குறிப்பிட்ட டீலர்களின் விற்பனை முடக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.
எனவே சத்தீஸ்கர் மாநில போக்குவரத்துத்துறையின் புதிய வாகன விநியோக தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை நீக்கம் எப்போது செய்யப்படும் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!