இனி நடுரோட்டில் பரிதவிக்க வேண்டாம்... ஹீரோ பைக் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!
வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்கும், அவசர உதவியை பெறுவதற்கும் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்கும், அவசர உதவியை பெறுவதற்கும் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சாலை அவசர உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 24 மணிநேர அவசர உதவியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

சாலையில் அவசர உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது ஹீரோ மொபைல் செயலி மூலமாக உதவி கோர முடியும்.

சாலை அவசர உதவித் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் போன் அழைப்பு மூலமாக உதவி பெறுவதற்கும், வாகனத்தை இருந்த இடத்திலேயே சரிசெய்து மீண்டும் பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பையும் பெற முடியும்.

மேலும், எரிபொருள் இல்லாமல் நின்றுபோனால், எரிபொருளை வாடிக்கையாளர் நிற்கும் இடத்திற்கே வந்து கொடுப்பதற்கான வாய்ப்பு, டயர் பஞ்சர், பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட், விபத்தின்போது அவசர உதவி, அருகாமையிலுள்ள சர்வீஸ் மையத்திற்கு வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான உதவி ஆகியவையும் இந்த திட்டத்தின் மூலமாக பெற முடியும்.

எந்த இடத்தில் வாங்கியிருந்தாலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இந்த திட்டத்தின் மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து அவசர உதவியை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக பெற முடியும்.

குறிப்பிட்ட பைக் மாடல்களின் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ரூ.350 கட்டணமாக செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் எக்ஸ்ஸ்ட்ரீம் 160ஆர், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ்200 ஆகிய பைக் மாடல்களுக்கு சாலை அவசர உதவி திட்டம் பெற முடியும். அக்டோபர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








