இது 3வது முறை... ஹோண்டாவின் அறிவிப்பால் உறைந்து நிற்கும் இந்திய இளைஞர்கள்... இப்படி பண்ணா எப்புடிங்க
ஹோண்டா நிறுவனத்தின் அதிரடி செயலால் இந்திய இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் டியோ ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விலையை ஹோண்டா நிறுவனம் தற்போது உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 473 வரை விலையுயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும். அதாவது, இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து இப்போது மூன்றாவது முறையாக ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம், டியோ ஸ்கூட்டரை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவை, எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் ஆகியவை ஆகும். புதிய விலை உயர்வால் எஸ்டிடி வேரியண்டின் விலை ரூ. 61,970 ஆகவும், டிஎல்எக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 65,320 ஆகவும் உயர்ந்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் இப்போதைய விலை பல மடங்கு உயர்வானதாக காட்சியளிக்கின்றது. எஸ்டிடி வேரியண்ட் இதுவரை ரூ. 5,749-யும், டிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ. 7,099 விலை உயர்வையும் பெற்றிருக்கின்றது. தொடர்ச்சியான அப்டேட்டுகளின் காரணமாக இந்த விலையுயர்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் 110சிசி எஃப்ஐ திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இது பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 7.6 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஏசிஜி ஸ்டார்டர் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மிக அமைதியான எஞ்ஜின் ஸ்டார்ட் ஒலியை மட்டுமே எழுப்ப உதவுகின்றது. இத்துடன், சில விநாடிகளில் ஸ்டார்ட் செய்யவும் உதவும்.


Click it and Unblock the Notifications








