Just In
- just now இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 47 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேடிஎம் 390 பைக் மார்க்கெட்டை குறிவைத்த ஏப்ரிலியா... தரமான சம்பவம் காத்திருக்கு!
இந்தியாவில் 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக ஏப்ரிலியா தெரிவித்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த புதிய பைக் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ வாகன குழுத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் உள்ள வர்த்தக வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. பிரிமீயம் ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் சூப்பர் பைக் மாடல்களுடன் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் ஏப்ரிலியா அடுத்து வர்த்தக வளம் உள்ள சந்தைகளிலும் புதிய மாடல்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கேடிஎம் நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் உள்ள 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் அறிமுக நிகழ்வின்போது, இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டியாகோ கிராஃபி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த புதிய பைக் மாடலானது ஏப்ரிலியா இந்திய பிரிவு எஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி, இத்தாலியில் வடிவமைக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
அதேநேரத்தில், இந்த புதிய பைக் மாடலானது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதுதான் ஆகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவிலிருந்து புதிய ஏப்ரிலியா பைக்கை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பைக் மாடல் குறித்த அதிகத் தகவல்களை கிராஃபி வெளியிடவில்லை. ஆனால், இதற்கான பணிகளில் பியாஜியோ குழுமம் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.
கேடிஎம் பாணியில் இந்த ஒரே சேஸீ, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு வகை பைக் மாடல்களாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலாகவும், நேக்கட் வகை தோற்றத்துடன் கூடிய மற்றொரு ரக மாடலாகவும் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ரகத்தில் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி 390, ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் க்ரூஸர் பைக் மாடல்களை எதிர்த்து களம் காண வேண்டும். எனினும், ஏப்ரிலியா பைக் மாடலை அதிக பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்துவதற்கும் பியாஜியோ வசம் திட்டம் உள்ளதாக தெரிகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?