Just In
- 12 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!
அடுத்த ஆண்டு 100 புதிய ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்களை இந்தியாவில் திறப்பதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா பிராண்டுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இரு நிறுவனங்களின் தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களுக்கு பெரும் வாடிக்கையாளர் வட்டம் உருவாகி வருகிறது. ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஆகிய நிறுவனங்களுமே பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய இருசக்கர வாகன சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் திட்டங்களை தீட்டி வருகிறது பியாஜியோ குழுமம். இதற்காக, பல புதிய இருசக்கர வாகன மாடல்களை இரு பிராண்டிலும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
விரைவில் ஏப்ரிலியா பிராண்டில் எஸ்க்ஸ்ஆர்160 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் வர இருக்கிறது. பிரம்மாண்டத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வரும் இந்த பிரிமீயம் ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், புதிய மாடல்களின் வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்குவதற்கும் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா தயாரிப்புகளுக்காக புதிதாக 100 டீலர்களை இந்தியாவில் நியமிக்க பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா நிறுவனங்கள் இந்தியாவில் 350 டீலர்களுடன் செயல்படுவதற்கான திட்டத்துடன் பியாஜியோ வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த இரண்டு பிராண்டுகளிலும் வர இருக்கும் புதிய இருசக்கர வாகன மாடல்கள் மற்றும் புதிய டீலர்களை பயன்படுத்தி வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்கும் பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஏப்ரிலியா பிராண்டில் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமின்றி, டூவானோ 400, ஆர்எஸ்400, ஆர்எஸ்660 மற்றும் டூவானோ 660 ஆகிய பைக் மாடல்களையும் கொண்டு வருவதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த பைக் மாடல்கள் எப்போது இந்தியா கொண்டு வரப்படும் என்பது குறித்து இதுவரை உறுதியானத் தகவல் இல்லை.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?