Just In
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 5 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!
கேரளாவில் ஒரே நாளில் 1000 மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி செய்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து கேரளாவில் ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறவுள்ள இந்த விழா, கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவுகளினால் கடந்த ஆண்டுகளை போல் விமர்சையாக கொண்டாடப்படவில்லை.
வழக்கமாக ஓணம் பண்டிக்கை நாளில் தான் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்க மலையாளிகள் விரும்புவர். இதனால் இந்த இந்த சமயத்தில் தான் தயாரிப்பு நிறுவனங்களும் கேரளாவில் போட்டி கொண்டு விற்பனை மாடல்களை விற்பனை செய்யும்.
இந்த வகையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு தனது டீலர்ஷிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் ஒரே நாளில் 1000 ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
இந்த 1000 பைக்குகளில் பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன் மட்டுமில்லாமல் 650 ட்வின் பைக்குகளும் அடங்குகின்றன. டெலிவிரி பணிகள் முடுக்கிவிட்டது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் விற்பனை செய்துவரும் தனது தயாரிப்புகளில் அப்டேட்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவருகிறது.
இந்த வகையில் இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கில் பிஎஸ்6 அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கிளாசிக் 350-க்கு மாற்று பைக் மாடலும் வடிவமைப்பு பணியில் உள்ளது. புதிய அறிமுகங்களாக மீட்டியோர் 350, ஹண்டர், ஷெர்பா மற்றும் புதிய 650சிசி பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து எதிர்காலத்தில் வெளிவரவுள்ளன.
இவற்றில் முதல் பைக்காக இந்த செப்டம்பர் மாதத்தில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று வேரியண்ட்களில் மீட்டியோர் 350 அறிமுகமாகவுள்ளது. இந்நிறுவனம் சிறிய பிஎஸ்6 பைக்குகளுக்கு ஜே ப்ளாட்ஃபாரத்தையும், பெரிய 650சிசி பைக்குகளுக்கு பி ப்ளாட்ஃபாரத்தையும் நம்பியிருக்கிறது.
புதிய அறிமுகங்களுக்கு இடையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் இருந்த 500சிசி பைக்குகளின் தயாரிப்பை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது. இந்த வகையில் நிறுத்தப்பட்ட கிளாசிக் 500 பைக்கிற்கு பெருமையளிக்கும் விதமாக அதன் கருப்பு எடிசனின் 1000 மாதிரிகள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.