கேமிராவின் கண்களில் முதல் முறையாக சிக்கிய ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... இதுதான் குறைந்த விலை பைக்கா!!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பெயரிடப்படாத புதிய தயாரிப்பு ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்ட புதிய பைக்காகும்.

ஆகையால், இதனை இன்டர்செப்டார் 350 மாடல் பைக் என்றே பலர் அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இப்பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த அறிமுகத்தை முன்னிட்டே தற்போது பெயரிடப்படாத அப்பைக் தீவிர சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியுள்ளன. தற்போது காடிவாடி தளத்தின் வாயிலாகவெளியாகியிருக்கும் புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கென இந்தியாவில் தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில், ஏற்கனவே விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடலாக இன்டர்செப்டார் 650 பைக் இருக்கின்றது. இதன் குறைந்த திறன் மற்றும் குறைந்த விலைக் கொண்ட பைக்காகவே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கும் பைக் பார்க்கப்படுகின்றது.

எனவேதான் தற்போது இப்பைக் பற்றிய படங்கள் மிக அதிகளவில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. இந்த புகைப்படங்கள் பைக்கின் பின் பகுதியை மட்டுமே வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம், பைக்கில் இடம்பெற இருக்கும் சைலென்சர் மற்றும் பின்பக்க தோற்றம் உள்ளிட்டவை தெளிவாக தெரிய வந்துள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் இன்டர்செப்டார் 650 பைக்கில் இரு சைலென்சர்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் சகோதர மாடல் என கூறப்படும், கேமிராவின் கண்களில் சிக்கிய பைக்கில் ஒரு சைலென்சர் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. விலை குறைப்பிற்காக இந்த நடவடிக்கையை ராயல் என்பீல்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.

இதேபோன்று குறிப்பிட்ட சில இழப்புகளை இப்பைக் பெற இருக்கின்றது. இதனால்தான் பட்ஜெட் பைக்காக அது உருவெடுத்திருக்கின்றது. இந்த பைக்கில் மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கும் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே எதிர்பார்க்கப்படுகின்றது. அதி தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் இப்பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இது வரும் 2021ம் ஆண்டு அல்லது அடுத்து ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








