Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் அதன் அட்டகாசமான மின்சார டூ-வீலரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜாம்பவான் நிறுவனங்களாக திகழ்ந்து வரும் பல நிறுவனங்கள் அதன் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டநிலையில், சற்று கால தாமதமாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, விரைவில் இதன் எலெக்ட்ரிக் வாகனம் சந்தையில் கால் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுசுகி மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில், அந்நிறுவனம் வெகு நீண்ட நாளாக மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யாமல் இருந்தது பெருத்த ஏமாற்றத்தை வழங்கி வந்தது. இந்த நிலையில்தான் சுசுகி மோட்டார் சைக்கிள் அதன் புதுமுக மின்சார வாகனத்தை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த தகவலை, சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கான துணை தலைவர் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், ஆஃப்டர் சேல்ஸ்) தேவாஷிஸ் ஹண்டா உறுதிச் செய்துள்ளார்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதிலும், அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்ததில் இருந்து மக்களின் பார்வை மின்சார வாகனங்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.
இந்த சூழ்நிலையை நிச்சயம் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார வாகனங்களை எரிபொருள் வாகனத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் பராமரிப்பது மிகவும் சுலபம், செலவும் மிகக் குறைவு. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் குறைந்த செலவில் அதிக பயன்பாடுகளை எலெக்ட்ரிக் வாகனத்தின் மூலம்.
இதனால்தான் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால், உச்சபட்ட விலை மற்றும் அடிப்படை வசதி இல்லாதது போன்ற காரணங்களால் இன்னும் இதன் விற்பனை ஆரம்பநிலையிலேயே உள்ளது. ஆனால், இருசக்கர மின்சார வாகனங்களைப் பொருத்தவரை இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.
இதனை உறுதிச் செய்யும் வகையில், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார வாகனங்களைக் களமிறக்கி வரும் ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை விகிதம் உள்ளது.
இத்தகைய வரவேற்பிற்கு அந்த நிறுவனத்தின் பெரும்பாலான வாகனங்கள் மலிவு விலையைக் கொண்டிருப்பதே முக்கியமான காரணமாக உள்ளது.
ஆனால், சுசுகி நிறுவனத்தின் மின்சார வாகனம் சற்று விலையுயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஐசி எஞ்ஜின் வாகனங்களின் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது சந்தையில் எம்மாதிரியான டிமாண்டை ஏற்படுத்தும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், மின்சார வாகனத்தை வாங்குவது எப்போதுமே தீமையை ஏற்படுத்தாது. இது, தற்போது உச்சபட்ச விலையைத் தொட்டு வரும் எரிபொருள் விலையுயர்வில் இருந்து நம்மை தப்பிக்க வைக்க உதவும். இதுமட்டுமா? சுற்றுப்புறச் சூழலுக்கும் இந்த மின்சார வாகனம் நண்பனாக செயல்படும்.
எனவேதான், மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்சார வாகன விற்பனையை ஊக்குவித்து வருகின்றன. இதற்காக ஃபேம்-2 திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க உதவும்.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!