Just In
- 1 min ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
- 17 min ago
சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!
- 1 hr ago
ஹோண்டா கார் வைத்துள்ளீர்களா? அப்போ நீங்கள் தான் முதலில் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!
- 3 hrs ago
வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
Don't Miss!
- News
பல்கலை வித்தகராக விளங்கிய விவேக்... இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ - மு.க.ஸ்டாலின்
- Sports
தோனியை கவர்ந்த அந்த தமிழக வீரர்.. போட்டிக்கு பின் விறுவிறுவென அருகில் சென்று.. ப்பா இதுதான் தல!
- Movies
அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை.. நடிகை கஸ்தூரி உருக்கம்!
- Lifestyle
அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?
பெனெல்லி இந்தியா நிறுவனம் அதன் 41வது டீலர்ஷிப் ஷோரூமை ஹவுராவில் திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்பீடு ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா நகரத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய டீலர்ஷிப் மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டீலர்ஷிப் மையத்தினை திறந்து வைத்து பேசிய பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபாக், ‘ஸ்பீடு ஆட்டோமொபைல்ஸ்' உடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

வாடிக்கையாளர்கள் சேவையில் எங்களது (பெனெல்லி) தத்துவம் எங்கள் ஹவுரா டீலர் கூட்டணி நிறுவனத்தின் நெறிமுறைகளுடன் ஒத்து போகிறது. இந்த டீலர்ஷிப் மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில் சிறப்பான சேவையினை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் எந்தவொரு மனகசப்பும் சிரமமுமின்றி வாடிக்கையாளர்கள் பெனெல்லி பைக்குகளின் உரிமையாளர் ஆக முடியும். எங்கள் முக்கிய நோக்கம் பெனெல்லியின் 3-எஸ் வசதிகள் இந்தியா முழுவதும் இருப்பதை உறுதி செய்து, வலுவான பிராண்டாக உருவெடுப்பதே ஆகும்.

இந்த வகையில் ஹவுரா டீலர்ஷிப் மையம் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களை பொறுத்தவரையில், டீலர்ஷிப் மையம் என்பது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ஒரு இடம் மட்டுமில்லாமல், பைக் ஆர்வலர்கள் வந்து பிற எண்ணம் கொண்ட ரைடர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தளம் என்றும் நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

பெனெல்லி- ஹவுரா டீலர்ஷிப் மையத்தின் தலைவர் அமிட் மகாரியா கருத்து தெரிவிக்கையில், பெனெல்லியை ஹவுராவிற்கு அழைத்து வருவதில் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உள்ளூர் பைக் ஆர்வலர்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம் என்றார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த பெனெல்லியின் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி அவற்றிற்கான ஆக்ஸஸரீ பாகங்களும் இந்த டீலர்ஷிப் மையத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. பெனெல்லி பிராண்டில் இருந்து தற்சமயம் லியோன்சினோ 500, பெனெல்லி இம்பெரீயல் 400 மற்றும் பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் என்ற மூன்று பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.