Just In
- 17 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 5 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கொரோனா வைரஸ் பரவல்... ஷிப்ட்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்தது சுஸுகி நிறுவனம்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஷிப்ட்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போல் அல்லாமல், இம்முறை மிக கடுமையான பாதிப்புகளை கோவிட்-19 ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன.
இந்த வரிசையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தனது ஆலையில், ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்அண்ட்பைக் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''எங்களது ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே ஏப்ரல் 28ம் தேதியில் இருந்து மே 1ம் தேதி வரை ஷிப்ட்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதற்கு ஏற்ப வரும் மே 2ம் தேதி முதல் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பும்'' என்றார். ஆனால் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு முன்னதாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி டொயோட்டா மற்றும் எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் 4 உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன.
இந்த 4 ஆலைகளிலும் வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்டபோது வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் முழுமையான ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதாலும், அதன் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியதாலும் ஆட்டோமொபைல் துறை முடங்கியது.
ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டிலும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமொபைல் துறையினருக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..