Just In
- 46 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்!
டக்கார் ராலியில் படுகாயமடைந்த இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் சவூதியிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதன்மையான ராலி ரேஸ் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அண்மையில் சவூதி அரேபியாவில் நடந்த டக்கார் ராலி பந்தயத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உலகின் மிக சவாலான இந்த ராலி ரேஸ் பந்தயத்தில் 7-வது முறையாக பங்கேற்றிருந்த சந்தோஷ் பெரிய அளவிலான ஆவலை இந்திய மோட்டார் பந்தய ரசிர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்.
ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் சென்றிருந்த சந்தோஷ், டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் பந்தயத்தில் அதிவேகத்தில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சி.எஸ்.சந்தோஷ் படுகாயமடைந்தார். குறிப்பாக, தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பிற வீரர்களின் உதவியால், மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரியாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த, சி.எஸ்.சந்தோஷின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரை சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு வர குடும்பத்தினர் விரும்பினர்.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ரியாத் நகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால், மயக்க மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் தற்காலிக கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவர் விரைவாக நலம் பெற மோட்டார் பந்தய வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.