Just In
- 27 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டக்கார் ராலி ஸ்டேஜ் 2 முடிவுகள்... 3வது ஸ்டேஜுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!
டக்கார் ராலியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நேற்று நடந்த இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்து அடுத்த கட்ட பந்தயத்திற்கு முன்னேறி உள்ளனர்.
டக்கார் ராலியின் ஸ்டேஜ்-2 பந்தயம் நேறறு நடந்தது. பிஷா என்ற இடத்தில் இருந்து வதி அத் தவாசிர் வரையில் இந்த பந்தயம் நடந்தது. பெரும்பான்மையான பகுதி மணல் மடிப்புகள் நிறைந்த பாலைவனப் பகுதியாக அமைந்தது. மொத்தம் 685 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த பந்தயத்தில் 457 கிமீ தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தில் 82 சதவீதம் மணல்பாங்கான பகுதியாக அமைந்தது. 13 சதவீதம் மணல் மடிப்புகள் நிறைந்ததாக இருந்ததாகவும், 5 சதவீதம் மண் சார்ந்த வழித்தடமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே மணல் மடிப்புகளை கொண்ட பாலைவனமாக இருந்ததால், அதனை தாண்டுவதில் வீரர்கள் பல சவால்களை சந்தித்தனர்.
முதல் ஸ்டேஜ் பந்தயத்தை போலவே, இரண்டாவது ஸ்டேஜ் பந்தயமும் மிக சவாலாக இருந்ததால், பல வீரர்கள் விலகினர். ஆனால், இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள பைக் பந்தய வீரர்கள் இரண்டாவது ஸ்டேஜையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, அடுத்து மூன்றாவது ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறினர்.
டக்கார் ராலியின் இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் பைக் பிரிவில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் வீரர் ஜோன் பரேடா முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை முதல் ஸ்டேஜ் போட்டியில் அதே அணியின் மற்றொரு வீரரான ரிக்கி பிராபெக் பிடித்தார். முதல் ஸ்டேஜ் போட்டியில் இவர் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை ராக்ஸ்டார் எனெர்ஜி ஹஸ்க்வர்னா ஃபேக்டரி ரேஸிங் அணி வீரர் பாப்லோ குயின்டானில்லா மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் ஷெர்கோ ஃபேக்டரி ராலி டீம் சார்பில் பங்குகொண்டுள்ள இந்திய வீரரான ஹரீத் நோவா 32வது இடத்தை பிடித்தார். இவர் ஸ்பெஷல் ஸ்டேஜ் பகுதியை 4 மணி 56 நிமிடங்கள் 5 வினாடிகளில் கடந்தார். முதல் இடத்தை பிடித்தவருடன் ஒப்பிடும்போது 38 நிமிடங்கள் 9 வினாடிகள் வித்தியாசத்தில் கடந்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ராலி பந்தய வீரரும், ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்குகொண்டுள்ள சி.எஸ்.சந்தோஷ் 36வது இடத்தை பிடித்தார். ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தை 5 மணி 2 நிமிடங்கள் 17 வினாடிகளில் எட்டினார். இரண்டாவது ஸ்டேஜ் பந்தயம் குறித்து சி.எஸ்.சந்தோஷ் கூறுகையில்,"இன்றைய போட்டியை நேர்மறை எண்ணத்துடனும், ஊக்கத்துடனும் துவங்கினேன். மணல் மடிப்புகளில் எனது பைக் சிறப்பானதாக இருந்தது. இந்த ஸ்டேஜ் மனதுக்கு நிறைவாக அமைந்தது," என்று கூறி இருக்கிறார்.
ஹீரோ மோட்டோகார்ப் அணியின் மற்ற வெளிநாட்டு வீரர்களான ஜாக்கம் ரோட்ரிக்கஸ் 12வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 14வது இடத்தையும் பிடித்து அசத்தினர். இந்த முறை ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று வருகின்றனர். தனிநபர்களுக்கான பைக் பிரிவில் பங்குகொண்டுள்ள இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் 85வது இடத்தை பிடித்தார்.