Just In
- just now பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பிரிந்து நடப்பாண்டுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இரு நிறுவனங்களும் கடந்த 2011ஆம் ஆண்டு தங்களின் கூட்டணியை முறித்துக் கொண்டன.
இதையடுத்து இரு நிறுவனங்களும் தனி-தனியாக நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இரு நிறுவனங்களும் கூட்டணியில் செயல்பட்டபோது கிடைத்ததைப் போலவே தற்போதும் இரு நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியாவில் கிடைத்து வருகின்றது.
இந்த நிலையில், தான் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியாக செயல்படத் தொடங்கிய ஆண்டு நினைவுத் தினத்தை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டாடி வருகின்றது. இந்நிகழ்வை தற்போது விழாவாகவே ஹீரோ மோட்டோகார்ப் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றது.
இந்த விழாவை முன்னிட்டு மிக சமீபத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டது. இந்திய மின் வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த செயலை அது மேற்கொண்டது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை கோகோரோ எனும் நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி இருக்கும் என்பது பற்றிய படத்தையே நிறுவனம் நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மற்றுமொரு தரமான சம்பவத்தை தற்போது ஹீரோ செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, உலக சாதனை படைக்கும் வகையில் தனது நிறுவனத்தின் சின்னத்தை மிகவும் பிரமாண்டமாக ஹீரோ உருவாக்கியுள்ளது. தனது புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கைக் கொண்டு இந்த பிரமாண்ட சின்னம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இருசக்கர வாகனத்தைக் கொண்டு இந்தளவு மிக பெரிய சின்னம் உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். ஆகையால் இது தற்போது கின்னஸ் உலக சாதனையில் (GUINNESS WORLD RECORDS) இடம் பிடித்திருக்கின்றது.
சுமார் 1000 அடி நீளம், 800 அடி அகலம் என்ற பரப்பளவில் 1845 ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்குகளைக் கொண்டு இந்த சின்னம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த உலக சாதனையை ஹீரோ மோட்டோகார்ப் செய்திருக்கின்றது.
ஹீரோ நிறுவனத்தின் இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்குறித்த தகவலை வெளியிட்டு மக்களையும், இந்திய இருசக்கர வாகன உலகையும் கிறங்கடிக்க செய்த நிலையில் தற்போது உலக சாதனைப் படைக்கும் வகையில் சின்னத்தை உருவாக்கியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதி படத்தை மட்டுமே வெளியிட்டிருந்தது. அதாவது, எலெக்ட்ரிக் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க உருவம் தெரியாத வண்ணம் வெறும் பக்கவாட்டு பகுதி மட்டுமே தெரியும் வகையில் அதன் படத்தை வெளியிட்டிருந்தது.
இந்த இருசக்கர வாகனத்தை மிக விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இந்த படத்தை வெளியிட்ட கையோடு முக்கிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையை பல புதிய தயாரிப்புகள் அலங்கரித்து வருகின்றன.
மிக விரைவில் ஓலா மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையை அதகளப்படுத்த இருக்கின்றன. இவை இம்மாதம் 15ம் தேதி நாட்டில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த நிலையில் தன் பங்காக ஹீரோ நிறுவனம் புதிய மின் வாகனத்தை எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தியாவில் மின் வாகனங்களுக்கு தேவையான நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முன்னணி நிறுவனங்கள் தொடங்கி, ஆரம்ப நிலை நிறுவனங்கள் வரை இந்தியாவில் போட்டிப் போட்டுக் கொண்டு மின்சார வாகனங்களை களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் மிக விரைவில் ஹீரோ மோட்டோகார்ப்பும் இணைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!