Just In
- 22 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 23 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!
3,000 ரோபோக்கள், 10,000 தொழிலாளர்கள் மற்றும் 1,000 எஞ்சினியர்களுடன் இரண்டு வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் திறனுடன் ஓலாவின் ஓசூர் ஆலை மிக பிரம்மாண்டமாக செயல்பட உள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கிடுகிடுக்க வைக்கும் திட்டத்துடன் ஓலா நிறுவனம் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது. புத்தாண்டில் ஓசூரில் ஆலை அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்திய நிலையில், பிப்ரவரி மாத துவக்கத்தில் ஆலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படும் இந்த ஆலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்றை ஓலா பகிர்ந்து கொண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் இந்த கனவு ஆலையானது நனவாக இருக்கிறது. ரூ.2,400 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் அளவுக்கு உதிரிபாக சப்ளையர்களின் உற்பத்தி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்த ஆலை வளாகத்தை மிகவும் இயற்கை சூழல் மிகுந்ததாகவும் உருவாக்குவதற்கு ஓலா முடிவு செய்துள்ளது. இதனால், பசுமை வளாகத்துடன் இந்த ஆலை செயல்பட உள்ளது.

அடுத்த சில மாதங்களில் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மிக விரிவானத் திட்டத்துடன் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

ஆண்டுக்கு 10 மில்லியன் மின்சார இருசக்கர வாகனங்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்யவும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, உலக அளவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தனது மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலையில் மின்சார இருசக்கர வாகன உற்பத்திப் பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3,000 ரோபோக்களும், 10,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். ரோபோக்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக சாஃப்ட்வேரை 1,000 எஞ்சினியர்கள் குழு மூலமாக கட்டுப்படுத்தப்படும்.
ஓசூரில் அமைக்கப்படும் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலை எப்படி இருக்கும் என்பதை அனிமேஷன் வடிவில் வீடியோவாக ஓலா வெளியிட்டுள்ளது. அதனை இந்த ஸ்லைடில் பார்க்கலாம்.