Just In
- 44 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!
ஹைதராபாத் ஐஐடிக்கு சொந்தமான ப்யூர் இவி நிறுவனம் சூப்பர் திறன்கள் கொண்ட மின்சார பைக்கை களமிறக்க தயாராகி வருகின்றது. இந்த மின்சார பைக் பற்றியும், அது எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும்நிலையில் புதிய சூப்பர் திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை இந்திய நிறுவனம் ஒன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்யூர் இவி எனும் நிறுவனமே அதன் இட்ரைஸ்ட் (ETryst) 350 மாடலை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ப்யூர் இவி ஓர் ஐஐடி ஹைதராபாத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிளே விரைவில் அறிமுகமாக இருக்கும் இட்ரைஸ்ட் 350 மாடல் எலெக்ட்ரிக் பைக். ஆகஸ்டு 15ம் தேதியில் இருந்து இப்பைக் விற்பனைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சார பைக் ஓர் இந்தியா தயாரிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு என அனைத்துமே உள்நாட்டில் வைத்தே செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இப்பைக்கிற்கு இந்திய அரசின் ஃபேம்2 மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சார பைக்கில் 3.5 kWh பேட்டரி பேக்கை பொருத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்ஜை ஓர் முழுமையான சார்ஜில் வழங்கும். இத்தகைய சூப்பர் திறன் கொண்ட பைக்கையே முதல் கட்டமாக 50 யூனிட் அளவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது ப்யூர் இவி. இவையனைத்தும் டெமோ பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 15ம் தேதி அன்று நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. முதல் கட்டமாக நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் இப்பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலேயே இப்பைக் முதலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மேலும், அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இட்ரைஸ்ட் மின்சார பைக் ரூ. 1லட்சம் என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதாக இருப்பதாகவும் வெளியாகி வருகின்றது.

இவ்வாறு உறுதியற்ற தகவல்கள் வெளியாகி வரும் அதேவேலையில் சில உறுதிவாய்ந்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, மின்சார பைக் அதிகபட்சமாக 85 கிமீ செல்லும் மற்றும் ஐந்து வருட வாரண்டில் விற்பனையில் வரும் என பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. இதுபோன்ற மேலும் பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகவும் இருக்கின்றன.
குறிப்பு: 2 மற்றும் 3 ஆகிய இரு புகைப்படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.