Just In
- 16 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார இருசக்கர வாகனங்களுக்கான புக்கிங் தொடக்கம்! ஐயாயிரும் ரூபா கொடுத்த போதும்!
இந்தியாவில் ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார இருசக்கர வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
சத்திஷ்கர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ரெட்மோட்டோ எக்ஸ்இவி. இந்த நிறுவனமே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் தனது கால் தடத்தை பதிக்கும் வகையில் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முன்பதிவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் அனைத்து மின் வாகனங்களையும் நிறுவனம் வெளியீடு செய்திருந்தநிலையில் தற்போது அவற்றிற்கான புக்கிங்கை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாளை (ஜூலை 2) முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான புக்கிங் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றது.
ரூ. 4,999 என்ற முன்தொகையில் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதற்கான லிங்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து சரியாக 3 மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஆகையால், நிறுவனத்தின் முதல் பேட்ஜ் மின்சார இருசக்கர வாகனங்கள் நவம்பர் மாதத்திற்குள் அதன் உரிமையாளர்களைச் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஒரு மின்சார பைக்கையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்எக்ஸ் மற்றும் ஆர்3எக்ஸ் ஆகிய பெயர்களில் ஸ்கூட்டர்களும், ஆர்5எக்ஸ் என்ற பெயரில் மின்சார பைக்கும் விற்பனைக்குக் கிடைக்கும். முன்னோட்டமாக இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்க இருக்கின்றது.
அந்தவகையில், சென்னை, புனே, பெங்களூரு, நொய்டா, பிரயாக்ராஜ், லக்னோ, ஜெய்பூர், இந்தூர், புவனேஸ்வர், போபால், பிலஸ்பூர், ராஞ்சி, ராய்பூர், கவுகாத்தி மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்களிலேயே ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார வாகனங்கள் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து டெஸ்ட் டிரைவ் போன்றவற்றை வழங்க நிறுவனம் முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத்தை அதிகரித்திருக்கின்றது.
உதாரண படம்
ஆகையால், ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார இருசக்கர வாகனங்கள் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஃபேம்2 திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இதனையே ரூ. 15 ஆயிரமாக அண்மையில் ஒன்றிய அரசு உயர்த்தியது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!