Just In
- 2 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஹோண்டா இந்த அளவுக்கு மோசமா போயிருச்சா! இப்படி ஆகும்னு யாரும் கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டாங்க!
சேல்ஸ் ரிப்போர்ட்:
2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஹோண்டா நிறுவனம் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில், 2,33,151 டூவீலர்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதே நேரத்தில் எஞ்சிய 17,020 டூவீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். ஒட்டுமொத்தமாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,23,621 டூவீலர்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட டூவீலர்களின் எண்ணிக்கை 2,10,612 ஆகும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டூவீலர்களின் எண்ணிக்கை 13,009 ஆகும். இதன் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,23,621 டூவீலர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை, 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்து, சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இவ்ளோ பெரிய வீழ்ச்சியா!
வருடாந்திர ஒப்பீட்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது ஹோண்டா நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மாதாந்திர ஒப்பீட்டில் ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,73,221 டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கை வெறும் 2,50,171 மட்டுமே. அதாவது 1.23 லட்சம் டூவீலர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த வீழ்ச்சியில் இருந்து ஹோண்டா நிறுவனம் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், எஸ்பி125, ஷைன், யுனிகார்ன், லிவோ, எக்ஸ் பிளேடு, ஹார்னெட் 2.0, சிபி 200 எக்ஸ், சிடி 110 ஆகிய தயாரிப்புகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
அதே நேரத்தில் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், டியோ, ஆக்டிவா, க்ரேஸியா போன்ற மாடல்களையும், பிக் பைக் என்ற பெரிய பைக் செக்மெண்ட்டில் ஹைனெஸ் சிபி 350, சிபி 350 ஆர்எஸ், சிபி 500 எக்ஸ், சிபி 650 ஆர், சிபி 300 எஃப், சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர், ஆப்ரிக்கா ட்வின், சிபி 300 ஆர் மற்றும் சிபிஆர் 650 ஆர் ஆகிய தயாரிப்புகளையும் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.
வருகிறது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இதில், ஆக்டிவா ஸ்கூட்டருக்குதான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்து வருகிறது. எனவே ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால், தற்போது விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரீமியம் மாடல்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், பிரீமியம் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்காக இந்திய வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...